» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தூத்துக்குடி - மேட்டுப்பாளையம் தினசரி ரயில் இயக்க வேண்டும் : சேம்பர் ஆஃப் காமர்ஸ் கோரிக்கை!
வெள்ளி 20, பிப்ரவரி 2026 12:34:22 PM (IST)

தூத்துக்குடி - மேட்டுப்பாளையம் வாரம் இருமுறை ரயிலை, பயணிகளின் நலன் கருதி உடனடியாக தினசரி ரயிலாக மாற்ற வேண்டும் என்று இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை சேம்பர் கோரிக்கை விடுத்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தின் ரயில் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தக் கோரி, தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என். சிங்-க்கு, தூத்துக்குடி இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை சேம்பர் தலைவர் ஆர். கோடீஸ்வரன் முக்கிய கோரிக்கை மனு ஒன்றை அனுப்பியுள்ளார்.
அந்த மனுவில் தூத்துக்குடி - மேட்டுப்பாளையம் இடையே தற்போது வாரம் இருமுறை இயக்கப்பட்டு வரும் ரயிலை, பயணிகளின் நலன் கருதி உடனடியாக தினசரி ரயிலாக மாற்ற வேண்டும்.
வண்டி எண். 16791/16792 தூத்துக்குடி - பாலக்காடு - தூத்துக்குடி விரைவு ரயிலில், பயணிகள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து வரும் ஏசி கோச்சுகளை உடனடியாக இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தூத்துக்குடி மற்றும் சென்னை இடையிலான பயண நேரத்தைக் குறைக்கவும், நவீன வசதிகளைப் பெறவும் இவ்விரு நகரங்களுக்கு இடையே வந்தே பாரத் ரயில் சேவையைத் தொடங்க வேண்டும்.
தூத்துக்குடியிலிருந்து மதுரை, திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம் மற்றும் மயிலாடுதுறை வழியாகச் செல்லும் வகையில் புதிய தினசரி விரைவு ரயில் ஒன்றை இயக்க வேண்டும். தூத்துக்குடியிலிருந்து ஹைதராபாத் மற்றும் மும்பை ஆகிய நகரங்களுக்கு நேரடி ரயில் சேவைகளை உருவாக்க வேண்டும்.
தூத்துக்குடியின் பொருளாதார வளர்ச்சி மற்றும் பயணிகளின் வசதியைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பிரதமர் மோடி வருகை: கன்னியாகுமரிக்கு தினசரி இரயில்கள் கிடைக்குமா? – பயணிகள் எதிர்பார்ப்பு!
வெள்ளி 20, பிப்ரவரி 2026 8:10:46 PM (IST)

அமிர்த் பாரத் கால அட்டவணையை மாற்றக் கோரிக்கை: நள்ளிரவில் சேருவதால் ரயில் பயணிகள் அவதி
வியாழன் 19, பிப்ரவரி 2026 8:02:34 PM (IST)

சீசன் காலத்தில் ஏமாற்றிய கேரை மீன்கள்: சூறைக் காற்றால் பாதியிலேயே கரை திரும்பிய மீனவர்கள்!
வியாழன் 19, பிப்ரவரி 2026 5:10:51 PM (IST)

விபத்தில் மூளைச்சாவு அடைந்த புதுமாப்பிள்ளை: உடல் உறுப்புகள் தானம் மூலம் 6 பேருக்கு மறுவாழ்வு
வியாழன் 19, பிப்ரவரி 2026 8:41:44 AM (IST)

துபாயில் வேலை என ஆசை காட்டி ரூ.1.5 கோடி மோசடி செய்தவர் 24 மணி நேரத்தில் கைது!
புதன் 18, பிப்ரவரி 2026 4:55:56 PM (IST)

மருத்துவ மேல்படிப்புக்கு சீட் வாங்கித் தருவதாக ரூ.18 லட்சம் மோசடி: தம்பதி உட்பட 3 பேர் மீது வழக்கு!
புதன் 18, பிப்ரவரி 2026 8:41:13 AM (IST)


BabuFeb 21, 2026 - 01:24:59 PM | Posted IP 104.2*****