» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் மதமாற்றம்? – இந்து மக்கள் கட்சி சார்பில் முதல்வரிடம் புகார் மனு!
திங்கள் 2, பிப்ரவரி 2026 4:40:59 PM (IST)

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளிடம் மதமாற்றம் செய்வதை தடுக்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி சார்பில் மருத்துவமனை முதல்வரிடம் (Dean) கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ளவர்களிடம், சில அமைப்புகள் திட்டமிட்டு மதமாற்றத்தில் ஈடுபட்டு வருவதாக இந்து மக்கள் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. மருத்துவமனை முதல்வரிடம் அளித்த மனுவில், "நோயாளிகளின் உறவினர்களுக்கு வார்டுகளுக்குள் செல்ல பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ளவர்களிடம், சில அமைப்புகள் திட்டமிட்டு மதமாற்றத்தில் ஈடுபட்டு வருவதாக இந்து மக்கள் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. மருத்துவமனை முதல்வரிடம் அளித்த மனுவில், "நோயாளிகளின் உறவினர்களுக்கு வார்டுகளுக்குள் செல்ல பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.
ஆனால், மதமாற்றக் குழுவினரை மட்டும் பாதுகாவலர்களும், சில பணியாளர்களும் கையூட்டுப் பெற்றுக்கொண்டு வார்டுகளுக்குள் அனுமதிப்பதாகத் தெரிகிறது. ஸ்ட்ரெச்சர் தள்ளுவது முதல் சிறிய பணிகளுக்குக் கூட நோயாளிகளிடம் பணம் வசூலிக்கப்படும் நிலையில், இத்தகைய சட்டவிரோதச் செயல்களுக்கு உடந்தையாக இருப்பது கண்டிக்கத்தக்கது. மருத்துவமனை வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்து மதப்பிரச்சாரம் செய்பவர்கள் மீது கடுமையான குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மனுவைப் பெற்றுக்கொண்ட மருத்துவமனை முதல்வர், இந்தப் புகார் குறித்து உடனடியாக ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். மேலும் மருத்துவமனை வளாகத்தில் மதப்பிரச்சாரம் செய்யக்கூடாது என்பதை வலியுறுத்தி எச்சரிக்கைப் பதாகைகள் வைக்கப்படும். விதிகளை மீறி மதமாற்றத்தில் ஈடுபடுபவர்கள் பிடிபட்டால், அவர்கள் மீது காவல்துறை மூலம் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் இந்து மக்கள் கட்சியின் மாநிலச் செயலாளர் வசந்தகுமார், மாநிலத் துணைத் தலைவர் ராமகுணசீலன், மாவட்ட அமைப்பாளர் சுடலைமணி, நைனா மற்றும் நிர்வாகிகள் இராஜவேல், சிம்பு கண்ணன் உள்ளிட்டப் பலர் கலந்து கொண்டனர்.
மனுவைப் பெற்றுக்கொண்ட மருத்துவமனை முதல்வர், இந்தப் புகார் குறித்து உடனடியாக ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். மேலும் மருத்துவமனை வளாகத்தில் மதப்பிரச்சாரம் செய்யக்கூடாது என்பதை வலியுறுத்தி எச்சரிக்கைப் பதாகைகள் வைக்கப்படும். விதிகளை மீறி மதமாற்றத்தில் ஈடுபடுபவர்கள் பிடிபட்டால், அவர்கள் மீது காவல்துறை மூலம் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் இந்து மக்கள் கட்சியின் மாநிலச் செயலாளர் வசந்தகுமார், மாநிலத் துணைத் தலைவர் ராமகுணசீலன், மாவட்ட அமைப்பாளர் சுடலைமணி, நைனா மற்றும் நிர்வாகிகள் இராஜவேல், சிம்பு கண்ணன் உள்ளிட்டப் பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

முதல்வர் மு.க. ஸ்டாலின் 19ம் தேதி குமரி வருகை : அரசு விழாவில் பங்கேற்கிறார்!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 12:15:42 PM (IST)

நாகர்கோவில் மார்டன் பள்ளியில் விதைப்பந்து விழிப்புணர்வு
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 10:49:12 AM (IST)

விளவங்கோடு அருகே குளத்தில் ஆண் சடலம் மீட்பு!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 10:47:38 AM (IST)

திருவனந்தபுரம் - நாகர்கோவில் மூன்றாவது ரயில் பாதை : பட்ஜெட்டில் அறிவிக்கப்படுமா?
சனி 31, ஜனவரி 2026 12:07:03 PM (IST)

மின் இணைப்பு கேட்டபெண்ணை உல்லாசத்திற்கு அழைத்த அதிகாரி பணியிடை நீக்கம்!
சனி 31, ஜனவரி 2026 11:16:03 AM (IST)

கன்னியாகுமரி காந்தி மண்டபத்தில் மகாத்மா காந்தி நினைவு தினம் அனுசரிப்பு!
வெள்ளி 30, ஜனவரி 2026 12:43:06 PM (IST)


இம்மானுவேல் குணசிங்Feb 3, 2026 - 01:03:16 PM | Posted IP 172.7*****