» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
கிறிஸ்தவ ஆலயத்தில் புதிய பங்குதந்தைக்கு எதிர்ப்பு : தூத்துக்குடியில் பரபரப்பு
ஞாயிறு 7, டிசம்பர் 2025 8:40:33 PM (IST)

தூத்துக்குடியில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் புதிய பங்கு தந்தைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு தரப்பினர் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி இன்னாசியார்புரத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் பங்குத்தந்தையாக பணியாற்றி வந்தவர் மீது பல்வேறு புகாரின் பேரில் பதவி நீக்கம் செய்யப்பட்டார். இந்த நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) சிறப்பு வழிபாட்டை முன்னிட்டு தற்காலிகமாக பொறுப்பேற்றுள்ள புதிய பங்குத்தந்தை ஆலயத்திற்கு வந்தார். அவரை உள்ளே விடாமல் பதவி நீக்கம் ஏற்பட்ட பங்கு தந்தையின் ஆதரவாளர்கள் தடுத்து வாக்குவாதம் செய்தனர்.
இதனால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து வடபாகம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு போலீசார் சென்று சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் சுமார் அரை மணி நேரம் ஜெப ஆராதனை நடைபெறவில்லை. பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் ஜெப ஆராதனைகள் நடந்தது. இதனால் ஆலயத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்த தெலுங்கானா தம்பதியர் விபத்தில் மரணம்
சனி 17, ஜனவரி 2026 5:23:06 PM (IST)

உடையார்விளையில் எம்.ஜி.ஆர் பிறந்தநாள் : முன்னாள் அமைச்சர் பச்சைமால் மரியாதை
சனி 17, ஜனவரி 2026 3:19:54 PM (IST)

பாறையில் தலை சிக்கி இளைஞர் உயிரிழப்பு: திற்பரப்பு படகு பகுதியில் சோகம்!
சனி 17, ஜனவரி 2026 12:39:45 PM (IST)

ரங்காபானி-நாகர்கோவில் இடையே வந்தே பாரத் ரயில்: இன்று முதல் தொடக்கம்!
சனி 17, ஜனவரி 2026 10:58:13 AM (IST)

பட்ஜெட்டில் கிழக்கு கடற்கரை ரயில் பாதை திட்டம் அறிவிக்கப்படுமா? பயணிகள் எதிர்பார்ப்பு
சனி 17, ஜனவரி 2026 10:32:11 AM (IST)

அதிமுக சார்பில் புதுமண தம்பதிகளுக்கு பொங்கல் சீர் வரிசைகள் வழங்கும் நிகழ்ச்சி!
புதன் 14, ஜனவரி 2026 12:53:02 PM (IST)


அவுங்கDec 11, 2025 - 12:19:03 PM | Posted IP 162.1*****