» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
கிறிஸ்தவ ஆலயத்தில் புதிய பங்குதந்தைக்கு எதிர்ப்பு : தூத்துக்குடியில் பரபரப்பு
ஞாயிறு 7, டிசம்பர் 2025 8:40:33 PM (IST)

தூத்துக்குடியில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் புதிய பங்கு தந்தைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு தரப்பினர் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி இன்னாசியார்புரத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் பங்குத்தந்தையாக பணியாற்றி வந்தவர் மீது பல்வேறு புகாரின் பேரில் பதவி நீக்கம் செய்யப்பட்டார். இந்த நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) சிறப்பு வழிபாட்டை முன்னிட்டு தற்காலிகமாக பொறுப்பேற்றுள்ள புதிய பங்குத்தந்தை ஆலயத்திற்கு வந்தார். அவரை உள்ளே விடாமல் பதவி நீக்கம் ஏற்பட்ட பங்கு தந்தையின் ஆதரவாளர்கள் தடுத்து வாக்குவாதம் செய்தனர்.
இதனால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து வடபாகம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு போலீசார் சென்று சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் சுமார் அரை மணி நேரம் ஜெப ஆராதனை நடைபெறவில்லை. பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் ஜெப ஆராதனைகள் நடந்தது. இதனால் ஆலயத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கலிங்கராஜபுரத்தில் புதிய விளையாட்டு அரங்கம் பணிகள் : முதல்வர் துவக்கி வைத்தார்!
திங்கள் 8, டிசம்பர் 2025 5:34:07 PM (IST)

குமரி மாவட்டத்தில் 40 புதிய மகளிர் விடியல் பேருந்துகள்: அமைச்சர் தொடங்கி வைத்தார்
திங்கள் 8, டிசம்பர் 2025 11:07:49 AM (IST)

குமரி பேராயர் கிறிஸ்டோபர் விஜயன் பதவியேற்பு விழா : பிரதம பேராயர் ரூபன் மார்க் பங்கேற்பு
திங்கள் 8, டிசம்பர் 2025 10:37:57 AM (IST)

விபத்தில்லா குமரி: லாரி ஓட்டுநர்களுக்கு காவல்துறை சார்பில் விழிப்புணர்வு
சனி 6, டிசம்பர் 2025 4:59:02 PM (IST)

குமரி மாவட்டத்தில் அம்பேத்கர் நினைவு நாள்: ரூ.14.11 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்!
சனி 6, டிசம்பர் 2025 4:11:06 PM (IST)

கன்னியாகுமரி புதிய பேராயராக கிறிஸ்டோபர் விஜயன் தேர்வு: நாளை பதவியேற்பு விழா
சனி 6, டிசம்பர் 2025 3:51:18 PM (IST)


.gif)
இவனுங்கDec 8, 2025 - 01:12:38 AM | Posted IP 172.7*****