» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

ஆபரேஷன் சிந்தூர் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நாடுகளுக்கு செல்லும் எம்பிக்கள்!

சனி 17, மே 2025 10:47:01 AM (IST)

ஆபரேஷன் சிந்தூர் விவகாரத்தில் இந்தியாவின் நிலை குறித்து விளக்கம் அளிக்க 7பேர் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நாடுகளுக்கு  செல்ல உள்ளனர். 

ஆபரேஷன் சிந்தூரை அடுத்து, பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை முன்வைக்க, பல்வேறு நாடுகளுக்கு பல கட்சி பிரதிநிதிகளை அனுப்ப மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஒவ்வொரு குழுவிலும் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் குழுவில் தூத்துக்குடி எம்பி கனிமொழி இடம்பெற்றுள்ளார். 

ஆபரேஷன் சிந்தூர் மற்றும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் தொடர்ச்சியான போராட்டத்தின் பின்னணியில், ஏழு அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் இந்த மாத இறுதியில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்கள் உட்பட முக்கிய கூட்டாளி நாடுகளுக்குச் செல்ல உள்ளனர். 

பின்வரும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏழு பிரதிநிதிகளை வழிநடத்துவார்கள்:

1 சஷி தரூர், காங்கிரஸ்
2)ரவி சங்கர் பிரசாத், பாஜக
3)சஞ்சய் குமார் ஜா, ஜேடியு
4)பைஜயந்த் பாண்டா, பாஜக
5)கனிமொழி கருணாநிதி, திமுக
6)சுப்ரியா சுலே, என்சிபி
7)ஸ்ரீகாந்த் ஏக்நாத் ஷிண்டே, சிவசேனா


மக்கள் கருத்து

நன்றிமே 17, 2025 - 12:16:51 PM | Posted IP 172.7*****

தூத்துக்குடி எம்.பி ரஷ்யா செல்கிறார்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory