» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
குஜராத்தில் இருந்து தூத்துக்குடிக்கு 2,600 டன் உப்பு ரயில் மூலம் வந்தது
திங்கள் 12, மே 2025 8:55:34 AM (IST)
குஜராத்தில் இருந்து ரயில் மூலம் 2 ஆயிரத்து 600 டன் உப்பு தூத்துக்குடிக்கு கொண்டு வரப்பட்டது. மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளுக்கு லாரிகள் மூலம் பிரித்து அனுப்பி வைக்கப்பட்டது.
இந்தியாவில் குஜராத்துக்கு அடுத்தபடியாக தூத்துக்குடி மாவட்டத்தில் அதிக அளவு உப்பு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இங்கு சுமார் 25 ஆயிரம் ஏக்கர் பரப்பில் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த உப்புத் தொழிலில் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். ஆண்டுக்கு சராசரியாக 25 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை முடிவடைந்த உடன் உப்பள தொழிலாளர்கள் உப்பு உற்பத்திக்கான பணிகளை தொடங்கினர்.
அதன்படி கடந்த பிப்ரவரி மாதம் புதிய உப்பு வரத் தொடங்கியது. அதே நேரத்தில் அவ்வப்போது பெய்து வரும் கோடை மழையால் உப்பு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டது. கடந்த சில வாரமாக உப்பு உற்பத்தி நடந்து வந்தது. ஆனாலும் தேவைக்கு ஏற்ப உப்பு இல்லாத நிலை ஏற்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து குஜராத்தில் இருந்து கப்பல் மூலம் தூத்துக்குடிக்கு உப்பு கொண்டு வரப்பட்டன. இந்த உப்பை தூத்துக்குடி வியாபாரிகள் விற்பனை செய்து வந்தனர்.
இந்த நிலையில் குஜராத் மாநிலத்தில் இருந்து ரயிலில் கண்டெய்னர் மூலம் சுமார் 2 ஆயிரத்து 600 டன் பருமணி உப்பு தூத்துக்குடி மீளவிட்டான் ரயில் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டது. இந்த உப்பு தலா 50 கிலோ எடை கொண்ட சாக்கு மூட்டைகளை இருந்தன. இதனை வியாபாரிகள் லாரிகள் மூலம் பல்வேறு இடங்களுக்கு அனுப்பி விற்பனை செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு: ஆட்சியர் ஆய்வு!
சனி 31, மே 2025 4:16:14 PM (IST)

சாத்தான் புகுந்துவிட்டதாக கூறி 3 குழந்தைகளை கொடூரமாக தாக்கிய மதபோதகர் கைது!
சனி 31, மே 2025 11:46:55 AM (IST)

திருவட்டார் பகுதியில் புதிய பேருந்து நிலையம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
வியாழன் 29, மே 2025 5:39:49 PM (IST)

ஆற்றூர் பேரூராட்சியில் ரூ.5ஆயிரம் லஞ்சம் வாங்கிய பில் கலெக்டர் கைது
புதன் 28, மே 2025 9:57:52 PM (IST)

தென்மேற்கு பருவமழை பாதிப்புகளுக்கு உடனடி நிவாரணம் வழங்கப்படும்: ஆட்சியர்
புதன் 28, மே 2025 3:21:25 PM (IST)

கைம்பெண்கள் - ஆதரவற்ற மகளிர் நலவாரியத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம்!
புதன் 28, மே 2025 11:52:18 AM (IST)

Bala Balaமே 17, 2025 - 03:17:08 PM | Posted IP 172.7*****