» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
செல்போனில் சார்ஜ் போட்டபோது மின்சாரம் தாக்கி மாணவி சாவு
திங்கள் 24, மார்ச் 2025 8:42:02 AM (IST)
செல்போனில் ‘சார்ஜ்' போட்டபோது மின்சாரம் தாக்கி 10-ம் வகுப்பு மாணவி உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை எர்ணாவூர் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் முகுந்தன். ஆட்டோ டிரைவர். அவரது மனைவி விஜயா. இவர்களுக்கு அனிதா (வயது 14), எழில்மதி (7) ஆகிய 2 மகள்கள் உண்டு. அனிதா அங்குள்ள அரசு உயர்நிலை நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு தாய் விஜயா மற்றும் மகள் எழில்மதி ஆகிய இருவரும் மளிகை பொருட்கள் வாங்க கடைக்கு சென்று இருந்தனர்.
வீட்டில் தனியாக இருந்த அனிதா பொதுத்தேர்வுக்கு படித்து கொண்டிருந்ததாக தெரிகிறது. அந்த நேரத்தில் அனிதா வீட்டிலிருந்த செல்போனை எடுத்து ‘சார்ஜ்' போடுவதற்காக ஈரமான கையால் ஸ்விட்சை அழுத்தியுள்ளார். அப்போது திடீரென மின்சாரம் தாக்கியதில் அலறியபடி அனிதா மயங்கி கீழே விழுந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வீட்டுக்குள் ஓடி வந்தனர். அப்போது அனிதா சுயநினைவு இல்லாமல் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இது குறித்து தாய் விஜயாவுக்கு உடனடியாக செல்போன் மூலம் தகவல் அளித்தனர். பின்னர், அனிதாவை உடனடியாக மீட்டு, சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு தூக்கி சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதைகேட்டு மாணவி அனிதாவின் பெற்றோர் கதறி அழுதனர். போலீசார் அனிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து எண்ணூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சென்னையில் செல்போனுக்கு ‘சார்ஜ்' போட்டபோது மின்சாரம் தாக்கி பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

முதல்வர் மு.க. ஸ்டாலின் 19ம் தேதி குமரி வருகை : அரசு விழாவில் பங்கேற்கிறார்!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 12:15:42 PM (IST)

நாகர்கோவில் மார்டன் பள்ளியில் விதைப்பந்து விழிப்புணர்வு
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 10:49:12 AM (IST)

விளவங்கோடு அருகே குளத்தில் ஆண் சடலம் மீட்பு!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 10:47:38 AM (IST)

திருவனந்தபுரம் - நாகர்கோவில் மூன்றாவது ரயில் பாதை : பட்ஜெட்டில் அறிவிக்கப்படுமா?
சனி 31, ஜனவரி 2026 12:07:03 PM (IST)

மின் இணைப்பு கேட்டபெண்ணை உல்லாசத்திற்கு அழைத்த அதிகாரி பணியிடை நீக்கம்!
சனி 31, ஜனவரி 2026 11:16:03 AM (IST)

கன்னியாகுமரி காந்தி மண்டபத்தில் மகாத்மா காந்தி நினைவு தினம் அனுசரிப்பு!
வெள்ளி 30, ஜனவரி 2026 12:43:06 PM (IST)

