» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
செல்போனில் சார்ஜ் போட்டபோது மின்சாரம் தாக்கி மாணவி சாவு
திங்கள் 24, மார்ச் 2025 8:42:02 AM (IST)
செல்போனில் ‘சார்ஜ்' போட்டபோது மின்சாரம் தாக்கி 10-ம் வகுப்பு மாணவி உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை எர்ணாவூர் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் முகுந்தன். ஆட்டோ டிரைவர். அவரது மனைவி விஜயா. இவர்களுக்கு அனிதா (வயது 14), எழில்மதி (7) ஆகிய 2 மகள்கள் உண்டு. அனிதா அங்குள்ள அரசு உயர்நிலை நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு தாய் விஜயா மற்றும் மகள் எழில்மதி ஆகிய இருவரும் மளிகை பொருட்கள் வாங்க கடைக்கு சென்று இருந்தனர்.
வீட்டில் தனியாக இருந்த அனிதா பொதுத்தேர்வுக்கு படித்து கொண்டிருந்ததாக தெரிகிறது. அந்த நேரத்தில் அனிதா வீட்டிலிருந்த செல்போனை எடுத்து ‘சார்ஜ்' போடுவதற்காக ஈரமான கையால் ஸ்விட்சை அழுத்தியுள்ளார். அப்போது திடீரென மின்சாரம் தாக்கியதில் அலறியபடி அனிதா மயங்கி கீழே விழுந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வீட்டுக்குள் ஓடி வந்தனர். அப்போது அனிதா சுயநினைவு இல்லாமல் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இது குறித்து தாய் விஜயாவுக்கு உடனடியாக செல்போன் மூலம் தகவல் அளித்தனர். பின்னர், அனிதாவை உடனடியாக மீட்டு, சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு தூக்கி சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதைகேட்டு மாணவி அனிதாவின் பெற்றோர் கதறி அழுதனர். போலீசார் அனிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து எண்ணூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சென்னையில் செல்போனுக்கு ‘சார்ஜ்' போட்டபோது மின்சாரம் தாக்கி பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குமரியில் எடுபடாத தவெக அலை: ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாததால் தொண்டர்கள் சோகம்
செவ்வாய் 5, மே 2026 8:10:21 PM (IST)

குமரி மாவட்டத்தில் பா.ஜனதா பெரும் சரிவு: தி.மு.க. கூட்டணி 5 தொகுதிகளை கைப்பற்றியது!
செவ்வாய் 5, மே 2026 8:56:19 AM (IST)

தாம்பரம் - திருவனந்தபுரம் அமித் பாரத் ரயிலைத் தினசரி ரயிலாக இயக்க கோரிக்கை
சனி 2, மே 2026 12:34:24 PM (IST)

நடத்தையில் சந்தேகம்: மனைவியைக் கழுத்தை நெரித்துக் கொன்ற கணவர் கைது!
வெள்ளி 1, மே 2026 12:50:09 PM (IST)

தமிழகத்திற்குத் தனி ரயில்வே அமைச்சகம் தேவை : குமரி மாவட்ட பயணிகள் சங்கம் கோரிக்கை
வெள்ளி 1, மே 2026 12:06:58 PM (IST)

குமரி மாவட்ட குடிநீர் தேவைக்காக பேச்சிப்பாறை அணையிலிருந்து நாளை முதல் தண்ணீர் திறப்பு!
வெள்ளி 1, மே 2026 10:36:50 AM (IST)


