» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த மீனவருக்கு 20 ஆண்டு சிறை : நாகர்கோவில் நீதிமன்றம் தீர்ப்பு
சனி 15, பிப்ரவரி 2025 3:42:45 PM (IST)
14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த மீனவருக்கு 20 ஆண்டு சிறை நாகர்கோவில் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
குமரி மாவட்டம், புதுக்கடை அருகே இணையம் புத்தன் துறை பகுதியை சேர்ந்தவர் சுதன் (32), மீனவர். இவர் கடந்த 2015-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இணையம் பகுதியை சேர்ந்த 14 வயது மாணவி ஒருவரை பெங்களூருக்கு அழைத்து சென்று லாட்ஜில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்தார். இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவி புதுக்கடை போலீசில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் போலீசார் சுதன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். சுதனை கைது செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுதலை ஆனார். இது தொடர்பான வழக்கு நாகர்கோவில் குழந்தைகள் பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
வழக்கு விசாரித்த நீதிபதி சுந்தரையா இன்று தீர்ப்பு கூறினார். இதையடுத்து சுதன் நீதிமன்றத்தில் ஆஜரானார். சுதனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.6000 அபாரதம் விதித்து தீர்ப்பு கூறினார். ரூ.6 ஆயிரத்தை கட்ட தவறினால் மேலும் ஒரு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. சுதனுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து போலீசார் அவரை கைது செய்து சிறைக்கு அழைத்து சென்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் வளர்ச்சி திட்டப் பணிகள்: ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
வியாழன் 3, ஜூலை 2025 10:16:50 AM (IST)

கால்நடைகளுக்கு கால்நோய், வாய்நோய் தடுப்பூசி பணி : ஆட்சியர் துவக்கி வைத்தார்!
புதன் 2, ஜூலை 2025 3:41:45 PM (IST)

குமரி மாவட்டத்தில் 3 அரசியல் கட்சிகளின் அங்கீகாரம் ரத்து : தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!
செவ்வாய் 1, ஜூலை 2025 10:49:52 AM (IST)

இஸ்ரோ இன்ஜினியர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை: குடும்ப பிரச்சினையால் விபரீத முடிவு!
செவ்வாய் 1, ஜூலை 2025 8:34:20 AM (IST)

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி சேர்க்கை கால நீடிப்பு!
திங்கள் 30, ஜூன் 2025 5:48:59 PM (IST)

தனியார் மருத்துவமனையில் ஆட்சியர் ஆய்வு!
திங்கள் 30, ஜூன் 2025 4:04:27 PM (IST)
