» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
கடன் வசூலில் ஒருவர் பலி : நிதி நிறுவன, காவல்துறை அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிய கோரிக்கை
ஞாயிறு 2, பிப்ரவரி 2025 5:34:04 PM (IST)
வல்லநாட்டில் வீட்டை ஜப்தி செய்ய முயன்றபோது ஒருவர் உயிரிழந்த சம்பவத்தில் காவல் துறை - தனியார் நிதி நிறுவன அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் நிதி நிறுவனம் அடகு பெற்ற வீட்டை ஜப்தி செய்ய, நீதி மன்றத்தை அணுகி உத்தரவு பெற்றுள்ளது. இதனை ஆதாரமாகக் கொண்டு தூத்துக்குடி காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் தலைமையில், முறப்பநாடு காவல்துறையினர், நிதி நிறுவன அதிகாரிகள், வழக்கறிஞர்கள் படையோடு சென்று, வீட்டை ஜப்தி செய்ய முயன்றிருக்கிறார்கள். சங்கரனும், அவரது மனைவி பத்திரகாளியும், குழந்தைகளும் கடனை அடைக்க மேலும் கால அவகாசம் கேட்டு கதறியதை, அங்கு யாரும் காது கொடுத்து கேட்காமல், ஜப்தி நடவடிக்கையில் முனைப்பு காட்டிய போது, பத்திரகாளி காவல் துறை அதிகாரி முன்பு விஷம் குடித்துள்ளார்.
அதனை காவலர் ஒருவர் தடுத்து, தட்டி விட்டதால், கீழே விழுந்த விஷமருந்து பாட்டிலை எடுத்து, சங்கரனும் குடித்துள்ளார். இருவரும் வாயில் நுரை தள்ளி விழுந்து, உயிருக்கு போராடிய நிலையிலும், அங்கிருந்த காவல்துறை கண்காணிப்பாளர் உட்பட அனைவரும் சங்கரனும், அவரது மனைவி பத்திரகாளியும் நடிப்பதாக அலட்சியப்படுத்தி, வீட்டை ஜப்தி செய்வதில் குறியாக இருந்துள்ளனர்.
காலம் கடந்த நிலையில் விஷம் குடித்தவர்களை மருத்துவ மனைக்கு கொண்டு சென்றுள்ளனர். மருத்துவமனைக்கு செல்லும் வழியில் சங்கரன் மரணமடைந்து விட்டார். அவரது மனைவி பத்திரகாளி மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறார். இவர்களது பானு (18) கல்யாணி (16) ஆகிய இரண்டு மகள்களும் தெருவில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
இது போன்ற துயரச் சம்பவங்கள் தமிழ்நாட்டில் அதிகரித்து வருவது வேதனை அளிக்கிறது. கடந்த 2017 ஆம் ஆண்டில் இசக்கிமுத்து குடும்பம் கந்துவட்டி கொடுமையால் நெல்லை ஆட்சியர் அலுவல வளாகத்தில் தீக்குளித்து உயிரிழந்தது. கடந்த 2024 ஆம் ஆண்டு மே மாதம் விவசாயி சங்கரசுப்பு என்பவர் ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்து மாண்டு போனார். இப்படி தொடரும் துயரச் சம்பங்களை தடுக்கும் முறையில் தனியார் நிதி நிறுவனங்களின் கடன் வசூல் முறைக்கு பொருத்தமான, சட்டம் நிறைவேற்றி, விதிமுறைகள் உருவாக்க வேண்டியது உடனடி அவசியமாகும்.
கடன் வசூலில் மனிதாபிமானம் காட்டாமல், சட்டவிரோதமாக நடந்து கொண்ட நிதி நிறுவன அதிகாரிகள், அவர்களுக்கு ஆதரவாக சென்ற காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அனைவர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்து, அவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். குடும்பத் தலைவரை இழந்து மருத்துவமனையில் உயிருக்கு போராடும் பத்திரகாளிக்கு உயர்ந்தபட்ச சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
அவர்களது இரண்டு பெண்களின் எதிர்கால வாழ்வை கருத்தில் கொண்டு அவர்களது உயர்கல்வி செலவுகளை அரசு ஏற்க வேண்டும். குடும்ப நிதி வழங்கி மறுவாழ்வு ஆதாரத்தை உறுதி செய்ய வேண்டும். இந்த வகைச் செலவுகள் அனைத்தையும் தனியார் நிதி நிறுவனத்திடம் வசூலிக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு, தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
நன்றிFeb 3, 2025 - 09:58:31 AM | Posted IP 172.7*****
எந்த தனியார் நிறுவனம் பெயர் என்ன
கோதர் மைதீன் தமுமுகFeb 2, 2025 - 07:42:26 PM | Posted IP 172.7*****
நிதி நிறுவனங்களுக்கு சீல் வைத்து நிதி நிறுவன உரிமையாளர், பணியாளர்கள், காவல் துறை அதிகாரிகள் என அனைவர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் பத்திரகாளி குழந்தைகள் 2 பேருக்கும் அரசு நிதி உதவி அளிக்க வேண்டும்
மேலும் தொடரும் செய்திகள்

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி சேர்க்கை கால நீடிப்பு!
திங்கள் 30, ஜூன் 2025 5:48:59 PM (IST)

தனியார் மருத்துவமனையில் ஆட்சியர் ஆய்வு!
திங்கள் 30, ஜூன் 2025 4:04:27 PM (IST)

இணையதளம் மூலமாக மட்டுமே சுகாதார சான்றிதழ் வழங்கப்படும் : ஆட்சியர் தகவல்
திங்கள் 30, ஜூன் 2025 12:19:27 PM (IST)

மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவர்
ஞாயிறு 29, ஜூன் 2025 11:28:11 AM (IST)

கன்னியாகுமரி கடல் அலையின் சீற்றத்தால் குளிக்க தடை: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
ஞாயிறு 29, ஜூன் 2025 11:09:27 AM (IST)

நாகர்கோவில் ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதியில் ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
வெள்ளி 27, ஜூன் 2025 4:58:02 PM (IST)

படித்து வேஸ்ட் ஆனவன்Feb 3, 2025 - 06:35:08 PM | Posted IP 162.1*****