» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
வில்லுக்குறியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் 53-வது கிளை: ஆட்சியர் ஆர்.அழகுமீனா திறந்து வைத்தார்
வியாழன் 23, ஜனவரி 2025 4:16:13 PM (IST)

வில்லுக்குறி பகுதியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் 53-வது கிளையினை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா திறந்து வைத்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறி பகுதியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் 53வது கிளையினை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, இன்று (23.01.2025) குத்துவிளக்கேற்றி, துவக்கி வைத்து தெரிவிக்கையில்- தமிழ்நாட்டில் அதிகமான வங்கி கிளைகளை கொண்ட பொதுத்துறை வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கன்னியாகுமரி மாவட்டத்தின் 53-வது கிளையை குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.
மேலும் விவசாயிகள், மீனவர்கள் மற்றும் சுயஉதவிக் குழுக்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து கடனுதவி வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள். மேலும் பொதுமக்கள் தனியார் நிதி நிறுவனங்களிடம் அதிக வட்டிக்கு கடன் பெற்று அவதிப்படுவதை தவிர்த்து அரசு வங்கிகளை பயன்படுத்திக்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் முதுநிலை மண்டல மேலாளர் வரபிரசாத், முதன்மை மேலாளர்கள் சண்முக சுந்தர பாண்டியன், சரவணகுமார் கண்ணன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் செல்வராஜ், வில்லுக்குறி பஞ்சாயத்து செயல் அலுவலர், பஞ்சாயத்து தலைவர், வணிகர் சங்க தலைவர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அதிமுக சார்பில் புதுமண தம்பதிகளுக்கு பொங்கல் சீர் வரிசைகள் வழங்கும் நிகழ்ச்சி!
புதன் 14, ஜனவரி 2026 12:53:02 PM (IST)

ஜன.16, 26ஆம் தேதிகளில் மதுக்கடைகள், பார்களை மூட ஆட்சியர் உத்தரவு!
திங்கள் 12, ஜனவரி 2026 4:35:54 PM (IST)

நாகர்கோவில்- நியூ ஜல்பைகுரி அமித் பாரத் ரயில் அறிவிப்பு வழித்தடத்தில் சிறிய மாற்றம் தேவை!
ஞாயிறு 11, ஜனவரி 2026 12:48:03 PM (IST)

உங்க கனவ சொல்லுங்க திட்டத்தில்1057 தன்னார்வலர்கள் தேர்வு: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 9, ஜனவரி 2026 4:52:17 PM (IST)

அனைவரும் சாலைவிதிகளை மதிக்க வேண்டும்: எஸ்பி ஸ்டாலின் வேண்டுகோள்
வெள்ளி 9, ஜனவரி 2026 3:25:46 PM (IST)

நாகர்கோவில் நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீசார் தீவிர சோதனை
வியாழன் 8, ஜனவரி 2026 3:37:10 PM (IST)

