» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
வில்லுக்குறியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் 53-வது கிளை: ஆட்சியர் ஆர்.அழகுமீனா திறந்து வைத்தார்
வியாழன் 23, ஜனவரி 2025 4:16:13 PM (IST)

வில்லுக்குறி பகுதியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் 53-வது கிளையினை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா திறந்து வைத்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறி பகுதியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் 53வது கிளையினை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, இன்று (23.01.2025) குத்துவிளக்கேற்றி, துவக்கி வைத்து தெரிவிக்கையில்- தமிழ்நாட்டில் அதிகமான வங்கி கிளைகளை கொண்ட பொதுத்துறை வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கன்னியாகுமரி மாவட்டத்தின் 53-வது கிளையை குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.
மேலும் விவசாயிகள், மீனவர்கள் மற்றும் சுயஉதவிக் குழுக்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து கடனுதவி வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள். மேலும் பொதுமக்கள் தனியார் நிதி நிறுவனங்களிடம் அதிக வட்டிக்கு கடன் பெற்று அவதிப்படுவதை தவிர்த்து அரசு வங்கிகளை பயன்படுத்திக்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் முதுநிலை மண்டல மேலாளர் வரபிரசாத், முதன்மை மேலாளர்கள் சண்முக சுந்தர பாண்டியன், சரவணகுமார் கண்ணன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் செல்வராஜ், வில்லுக்குறி பஞ்சாயத்து செயல் அலுவலர், பஞ்சாயத்து தலைவர், வணிகர் சங்க தலைவர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திங்கள்சந்தை- புதுக்கடை சாலையில் பாலம் பணி: 10 நாட்களுக்கு குடிநீர் வினியோகம் ரத்து!
திங்கள் 15, செப்டம்பர் 2025 5:00:08 PM (IST)

கள்ளக்காதலில் பிறந்த குழந்தையை கொன்று குளத்தில் வீசிய கொடூரம்: இளம்பெண் கைது!
திங்கள் 15, செப்டம்பர் 2025 12:53:57 PM (IST)

தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்: கனிமொழி தலைமையில் உறுதிமொழி ஏற்பு
திங்கள் 15, செப்டம்பர் 2025 12:48:00 PM (IST)

மைசூர் - திருநெல்வேலி சிறப்பு ரயிலை கன்னியாகுமரியிலிருந்து இயக்க கோரிக்கை!
திங்கள் 15, செப்டம்பர் 2025 10:12:10 AM (IST)

மின்கம்பத்தில் தொங்கியவாறு கேங்மேன் மரணம் : போலீஸ் விசாரணை!
சனி 13, செப்டம்பர் 2025 5:46:58 PM (IST)

ரயிலில் கார்களை கொண்டு செல்ல சேவை தொடங்க வேண்டும்: பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை!
சனி 13, செப்டம்பர் 2025 4:19:08 PM (IST)
