» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
பொதுவுடமை வீரர் ப.ஜீவானந்தம் நினைவு தினம் : ஆட்சியர் ஆர்.அழகுமீனா மரியாதை|
சனி 18, ஜனவரி 2025 5:41:40 PM (IST)

பொதுவுடமை வீரர் ப.ஜீவானந்தம் நினைவு நாளையொட்டி, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, அன்னாரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பொதுவுடமை வீரர் ப.ஜீவானந்தம் அவர்களின் 60-வது நினைவு நாளையொட்டி, கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், செய்தி மக்கள் தொடர்புத்துறையின்கீழ், நாகர்கோவில், வேப்பமூடு சந்திப்பில் அமைந்துள்ள ஜீவா நினைவு மண்டபத்திலுள்ள, அன்னாரது திருவுருவ சிலைக்கு கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ் முன்னிலையில் இன்று (18.01.2023) மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில் : பொதுவுடமை வீரர் ப.ஜீவா 21.08.1907-இல் பிறந்தார். தந்தையின் பெயர் பட்டன்பிள்ளை. தாயார் பெயர் உமையம்மை. இவரது இயற்பெயர் சொரிமுத்து. கன்னியாகுமரி மாவட்டம், பூதப்பாண்டி தொடக்கப் பள்ளியில் பள்ளிப்படிப்பை பயின்ற பின்னர், கோட்டாறு உயர்நிலைப்பள்ளியில் கல்வி பயின்றார். புரட்சிகரமான கொள்கை மற்றும் சமுதாயத்தொண்டால், இலக்கிய சேவையால், சுதந்திரப்போராட்ட தியாகத்தால் குமரிக்கு தனிப்பெருமை சேர்த்தவர் எனும் புகழுக்குரியவர் பொதுவுடைமை வீரர் ப.ஜீவானந்தம் ஆவார்கள்.
1955-ம் ஆண்டு சென்னை பல்கலைக்கழக செனட் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். கன்னியாகுமரி மாவட்ட இணைப்பு போராட்டத்தில் தீவிர பங்குபெற்ற, பொதுவுடைமை வீரர் ப.ஜீவானந்தம் 18.01.1963-ம் நாள் இவ்வுலகை விட்டு மறைந்தார். காலுக்கு செருப்பின்றி கால் வயிற்றுக்கு கூழுமின்றி பாழுக்கு உழைத்தோமடா பசையற்று போனோமடா என்று பாட்டாளி வர்க்கத்தின் பசிப்பிணியை உலகிற்கு பறைசாற்றியவர், பொதுவுடமை கருத்துக்களுக்கு சொந்தக்காரர் ப.ஜீவா. அன்னாரது 60-வது நினைவு நாளையொட்டி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டுள்ளது என ஆட்சியர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், நாகர்கோவில் மாநகராட்சி துணை மேயர் மேரி பிரின்சி லதா, நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் க.சேதுராமலிங்கம், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) ஜா.லெனின்பிரபு, அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியர் ராஜேஷ், மாமன்ற உறுப்பினர்கள் ஜவஹர், செல்வி.கௌசிகா, அன்னலெட்சுமி, ஸ்டாலின் பிரகாஷ், காரவிளை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் ஆனந்த், அரசு வழக்கறிஞர் மதியழகன், பன்னீர் செல்வம் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இரத்த தானம் வழங்குவதில் மருத்துவ பணியாளர்கள் முன்மாதிரி : அமைச்சர் ராஜேஷ் குமார் பெருமிதம்!
வெள்ளி 29, மே 2026 3:59:42 PM (IST)

கன்னியாகுமரி வந்த விவேக் எக்ஸ்பிரஸ் ரயிலில் 10 கிலோ கஞ்சா பறிமுதல்!
வியாழன் 28, மே 2026 8:29:39 PM (IST)

நாகர்கோவில் – கோவை அதிவிரைவு ரயிலில் கூடுதல் பொதுப்பெட்டி இணைப்பு: தற்காலிக நடவடிக்கை!
வியாழன் 28, மே 2026 8:23:21 PM (IST)

சாலையில் நடந்து சென்றபோது பைக் மோதி விபத்து: மாணவி பரிதாப சாவு!
புதன் 27, மே 2026 12:52:57 PM (IST)

வளர்ச்சித்திட்டங்களை விரைந்து முடிக்க வேண்டும் : சுற்றுலாத்துறை அமைச்சர் செ.ராஜேஷ் குமார்
செவ்வாய் 26, மே 2026 12:05:02 PM (IST)

குமரியில் 2 கிலோ கஞ்சா பறிமுதல்: நெல்லையைச் சேர்ந்த 2 இளைஞர்கள் கைது!
திங்கள் 25, மே 2026 5:14:10 PM (IST)


