» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை!
சனி 11, ஜனவரி 2025 8:55:23 PM (IST)

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக சுற்றுலா பயணிகளுக்கு 3 நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலையையும், விவேகானந்தர் நினைவுப் பாறையையும் இணைக்கும் வகையில் ரூ.37 கோடி செலவில் கண்ணாடி கூண்டுப் பாலம் கட்டப்பட்டு, திருவள்ளுவர் சிலையின் வெள்ளி விழாக் கொண்டாட்டத்தினை முன்னிட்டு திறக்கப்பட்டது. கடலுக்கு மேலே மிதந்து செல்லும் வகையிலான தோற்றத்தைக் கொடுக்கும் இந்தக் கண்ணாடி இழைக் கூண்டுப் பாலம் திறக்கப்பட்டதிலிருந்து இதில் நடந்து செல்ல சுற்றுலாப் பயணிகள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், கடல் நடுவே அமைந்துள்ள கண்ணாடி கூண்டு இழைபாலத்தில் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால், 3 நாட்களுக்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
மக்கள் கருத்து
podhu janamJan 12, 2025 - 10:35:40 AM | Posted IP 162.1*****
Within 3months period of opening by Diravida model CM, Maintenance work arrived. Great achievement and good quality.
மேலும் தொடரும் செய்திகள்

குமரி மாவட்டத்தில் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டம் துவக்கம்!
செவ்வாய் 30, டிசம்பர் 2025 5:27:33 PM (IST)

கரும்புச்சாறு இயந்திரத்தில் கை சிக்கி சிறுவன் படுகாயம்
செவ்வாய் 30, டிசம்பர் 2025 4:24:18 PM (IST)

ஆவின் பால் பாக்கெட்டுகளில் எஸ்ஐஆர் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் - ஆட்சியர் தகவல்!
செவ்வாய் 30, டிசம்பர் 2025 11:28:24 AM (IST)

குமரி மாவட்டத்தில் கால்நடைகளுக்கான தடுப்பூசி பணி: ஆட்சியர் ஆர்.அழகுமீனா துவக்கி வைத்தார்
திங்கள் 29, டிசம்பர் 2025 5:22:52 PM (IST)

சுசீந்திரம் தேரோட்ட திருவிழா: குமரி மாவட்டத்திற்கு ஜன.2ஆம் தேதி உள்ளூர் விடுமுறை
திங்கள் 29, டிசம்பர் 2025 4:18:47 PM (IST)

நாகர்கோவில் பேருந்து நிலைய தபால்நிலையம் ஜனவரி 3ம் தேதி மூடல்!
சனி 27, டிசம்பர் 2025 4:11:51 PM (IST)



.gif)
இது தான்Jan 12, 2025 - 12:07:41 PM | Posted IP 162.1*****