» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

பள்ளிப் பேருந்து வயலுக்குள் பாய்ந்து விபத்து: மாணவ, மாணவிகள் உயிர் தப்பினர்

வியாழன் 9, ஜனவரி 2025 7:55:56 AM (IST)

குரும்பூர் அருகே பள்ளிப் பேருந்து வயலுக்குள் பாய்ந்து விபத்துக்கு உள்ளானது. இதில் பயணித்த 40 மாணவ, மாணவிகள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர்.

தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர் அருகே உள்ள பணிக்கநாடார்குடியிருப்பு பகுதியில் தனியார் பள்ளி செயல்படுகிறது. நேற்று மாலையில் பள்ளி முடிந்தவுடன், 40 மாணவ, மாணவிகளை ஏற்றிக் கொண்டு பள்ளிப் பேருந்து ஏரலை நோக்கி சென்று கொண்டிருந்தது. குரும்பூர் அடுத்துள்ள பாலத்தில் சென்றபோது, எதிரே வந்த தனியார் கல்லூரி பஸ் மீது மோதாமல் இருப்பதற்காக, டிரைவர் பள்ளிப் பேருந்தை பக்கவாட்டில் திருப்பி உள்ளார்.

இதில் நிலைதடுமாறிய அந்த பஸ் அருகிலுள்ள வயலுக்குள் பாய்ந்து விபத்துக்கு உள்ளானது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவ, மாணவிகள் கூச்சலிட்டனர். உடனடியாக அந்த வழியாக சென்றவர்களும், அக்கம் பக்கத்தினரும் ஓடிசென்று பஸ்சில் இருந்த மாணவ, மாணவிகளை பாதுகாப்பாக மீட்டனர். 

இதில், பஸ்சில் இருந்த 40 மாணவ, மாணவிகளும் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர். தகவல் அறிந்த மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் குவிந்தனர். பின்னர் அவர்கள், குழந்தைகளை வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து

கேள்விJan 9, 2025 - 08:41:13 AM | Posted IP 162.1*****

:எதிரே வந்த தனியார் கல்லூரி பஸ்" அது எந்த கல்லூரி பஸ் ?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory