» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
முத்தையாபுரம் பாலத்தின் சுவரில் வண்ணம் தீட்டும் பணி: மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு
வியாழன் 28, நவம்பர் 2024 5:42:16 PM (IST)

தூத்துக்குடி முத்தையாபுரம் ரவுண்டானவில் பாலத்தின் சுவரில் வண்ணம் தீட்டும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார்.
பின்னர் மேயர் கூறுகையில், தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளை அழகுபடுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம். அதன் ஒரு பகுதியாக முத்தையாபுரம் ரவுண்டானாவில் தூத்துக்குடி மாநகராட்சியும் ஸ்பிக் நிறுவனமும் இணைந்து பாலத்தின் சுவற்றில் வண்ணம் தீட்டும் பணிகளும் பூங்கா அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றது. அந்தப் பணிகளையும் எம்டிஏ காலனி பகுதியில் நடைபெற்று வரும் புதிய பூங்கா பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தோம் என்றார்.
ஆய்வின்போது, மாநகராட்சி ஆணையர் மதுபாலன், வட்ட செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன், வட்ட செயலாளர் பிரசாந்த், மாமன்ற உறுப்பினர் முத்துவேல், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடன் சென்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குமரியில் படகு சேவை தற்காலிகமாக நிறுத்தம்: சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:24:18 PM (IST)

குழந்தைகள் பாதுகாப்பு அலகில் பணியிடம் : விண்ணப்பங்கள் வரவேற்பு!
வெள்ளி 19, டிசம்பர் 2025 12:12:56 PM (IST)

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல்நிலை சரிபார்ப்பு பணி: ஆட்சியர் ஆய்வு
வியாழன் 18, டிசம்பர் 2025 5:53:00 PM (IST)

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி திருக்கோயிலில் நாளை ஹனுமான் ஜெயந்தி விழா
வியாழன் 18, டிசம்பர் 2025 3:42:39 PM (IST)

சட்டவிரோதமாக செயல்பட்ட கல்குவாரியில் எஸ்பி ஆய்வு : மேற்பார்வையாளர் கைது!
வியாழன் 18, டிசம்பர் 2025 12:06:04 PM (IST)

நாகர்கோவிலில் நாளை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் - ஆட்சியர் தகவல்!
வியாழன் 18, டிசம்பர் 2025 10:42:55 AM (IST)


.gif)
உண்மை விளம்பிNov 28, 2024 - 11:13:08 PM | Posted IP 172.7*****