» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
நவராத்திரி விழாவுக்கு யானையை வரவழைக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்!
செவ்வாய் 8, அக்டோபர் 2024 10:42:18 AM (IST)
கன்னியாகுமரி பகவதியம்மன் கோவிலில் நவராத்திரி விழாவுக்கு யானை பயன்படுத்தாததை கண்டித்து 48 கிராமங்களை சேர்ந்த ஊர் பொதுமக்கள், பக்தர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கன்னியாகுமரி பகவதியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி திருவிழா, நவராத்திரி விழா என இரு திருவிழாக்கள் நடைபெறுகிறது. இதில் நவராத்திரி விழா 10 நாட்கள் விமரிசையாக நடைபெறும்.
இந்த திருவிழா காலங்களில் விவேகானந்தபுரத்தில் உள்ள காசி விஸ்வநாதர் கோவில் சர்க்கரை தீர்த்த கிணற்றில் இருந்து புனித நீரை யானையின்மீது எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்வது மற்றும் ஊர்வலத்திற்கு யானைமீது பயன்படுத்துவது வழக்கம். கடந்த வைகாசி திருவிழாவிற்கு யானை வரவழைக்கப்படவில்லை. அது பக்தர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இந்தநிலையில் தற்போது நடந்து வரும் நவராத்திரி விழாவிற்கு யானையை வரவழைக்க வேண்டும் என பக்தர்கள் சங்கம் சார்பில் கலெக்டர் மற்றும் இந்து அறநிலையத்துறை இணை ஆணையருக்கு மனு கொடுக்கப்பட்டது. இதற்கிடையே கடந்த 3-ந் தேதி முதல் நவராத்திரி திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆனால் இந்த ஆண்டும் விழாவுக்கு யானை வரவழைக்கப்படவில்லை.
எனவே இந்து அறநிலையத்துறையை கண்டித்து 48 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், பக்தர்கள் சார்பில் போராட்டத்தில் ஈடுபட போவதாக போலீஸ் நிலையத்தில் மனு கொடுத்தனர். அதன்படி நேற்று கன்னியாகுமரி பஸ் நிலைய ரவுண்டானாவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
மேலும் முக்கடல் சங்கமத்தில் புனித நீராட செல்லும் பக்தர்கள் தங்குதடையின்றி செல்ல அங்கு புதிதாக அமைத்திருக்கும் கேட்டை அகற்றவும், பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனத்திற்கு செல்லும் பக்தர்களை ஆகம விதிகளுக்கு புறம்பாக மாற்றுப்பாதையில் அனுமதிக்கப்படுவதை கண்டித்தும், பகவதி அம்மன் கோவிலுக்கு சொந்தமான நந்தவனத்தில் மதில் சுவர் கட்டி முறையாக பராமரிப்பு செய்யவும் வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் 48 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருவனந்தபுரம் - திருநெல்வேலி நேரடி பயணிகள் ரயில்கள் இயக்க கோரிக்கை
வியாழன் 10, ஜூலை 2025 5:21:07 PM (IST)

குமரி மாவட்டத்தில் 8 நாட்களில் 10 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு!!
புதன் 9, ஜூலை 2025 8:26:11 PM (IST)

விரிகோடு ரயில்வே கேட் வழியாக மேம்பாலம் அமைக்கப்படும்: விஜய் வசந்த் எம்.பி. உறுதி!!
புதன் 9, ஜூலை 2025 8:22:21 PM (IST)

பிளஸ்-2 மாணவி பலாத்காரம்: திருமணமான வாலிபர் மீது போக்சோ வழக்கு
புதன் 9, ஜூலை 2025 8:19:31 PM (IST)

சுற்றுலா திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா அழைப்பு!
புதன் 9, ஜூலை 2025 5:19:37 PM (IST)

கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் கூடுதல் கட்டிடப் பணிகள்: அமைச்சர் அடிக்கல் நாட்டினார்!
புதன் 9, ஜூலை 2025 4:08:01 PM (IST)
