» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
அடிதடி வழக்குகளில் தொடர்புடைய 2பேர் குண்டர் சட்டத்தில் கைது!
சனி 18, மே 2024 5:01:30 PM (IST)
கன்னியாகுமரி மாவட்டத்தில் கொலை முயற்சி, அடிதடி வழக்குகளில் தொடர்புடைய 2 வாலிபர்கள் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
நாகர்கோவில் புன்னை நகரை சேர்ந்தவர் நவீன்குமார் (30), தொழிலாளி. இவர் மீது நேசமணி நகர், கோட்டார் ஆகிய போலீஸ் நிலையங்களில் கொலை முயற்சி, அடிதடி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. எனினும் போலீசாரின் எச்சரிக்கையை மீறி இவர்கள் தொடர்ந்து குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததால் நவீன்குமாரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய எஸ்பி சுந்தரவதனம் ஆட்சியர் ஸ்ரீதரிடம் பரிந்துரை செய்தார்.
அதனை ஆட்சியர் ஏற்றுக் கொண்டு நவீன்குமாரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதேபோல சரலூர் பகுதியை சேர்ந்த அஜய் கண்ணன் (23) என்பவர் மீது நேசமணி நகர் காவல் நிலையத்தில் கொலை முயற்சி, அடிதடி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. அவரையும் எஸ்பி உத்தரவின் பேரில் குண்டர் சட்டத்தில் கைது செய்ய ஆட்சியர் உத்தரவிட்டார். இதையடுத்து 2பேரையும் போலீசார் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர். இந்த ஆண்டில் மட்டும் குண்டர் சட்டத்தின் கீழ் இதுவரை மொத்தம் 23பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குமரியில் படகு சேவை தற்காலிகமாக நிறுத்தம்: சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:24:18 PM (IST)

குழந்தைகள் பாதுகாப்பு அலகில் பணியிடம் : விண்ணப்பங்கள் வரவேற்பு!
வெள்ளி 19, டிசம்பர் 2025 12:12:56 PM (IST)

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல்நிலை சரிபார்ப்பு பணி: ஆட்சியர் ஆய்வு
வியாழன் 18, டிசம்பர் 2025 5:53:00 PM (IST)

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி திருக்கோயிலில் நாளை ஹனுமான் ஜெயந்தி விழா
வியாழன் 18, டிசம்பர் 2025 3:42:39 PM (IST)

சட்டவிரோதமாக செயல்பட்ட கல்குவாரியில் எஸ்பி ஆய்வு : மேற்பார்வையாளர் கைது!
வியாழன் 18, டிசம்பர் 2025 12:06:04 PM (IST)

நாகர்கோவிலில் நாளை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் - ஆட்சியர் தகவல்!
வியாழன் 18, டிசம்பர் 2025 10:42:55 AM (IST)


.gif)