» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
அடிதடி வழக்குகளில் தொடர்புடைய 2பேர் குண்டர் சட்டத்தில் கைது!
சனி 18, மே 2024 5:01:30 PM (IST)
கன்னியாகுமரி மாவட்டத்தில் கொலை முயற்சி, அடிதடி வழக்குகளில் தொடர்புடைய 2 வாலிபர்கள் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
நாகர்கோவில் புன்னை நகரை சேர்ந்தவர் நவீன்குமார் (30), தொழிலாளி. இவர் மீது நேசமணி நகர், கோட்டார் ஆகிய போலீஸ் நிலையங்களில் கொலை முயற்சி, அடிதடி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. எனினும் போலீசாரின் எச்சரிக்கையை மீறி இவர்கள் தொடர்ந்து குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததால் நவீன்குமாரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய எஸ்பி சுந்தரவதனம் ஆட்சியர் ஸ்ரீதரிடம் பரிந்துரை செய்தார்.
அதனை ஆட்சியர் ஏற்றுக் கொண்டு நவீன்குமாரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதேபோல சரலூர் பகுதியை சேர்ந்த அஜய் கண்ணன் (23) என்பவர் மீது நேசமணி நகர் காவல் நிலையத்தில் கொலை முயற்சி, அடிதடி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. அவரையும் எஸ்பி உத்தரவின் பேரில் குண்டர் சட்டத்தில் கைது செய்ய ஆட்சியர் உத்தரவிட்டார். இதையடுத்து 2பேரையும் போலீசார் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர். இந்த ஆண்டில் மட்டும் குண்டர் சட்டத்தின் கீழ் இதுவரை மொத்தம் 23பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பிரசவித்த பின் குழந்தைகளின் செவித்திறன்களை நன்கு ஆராய வேண்டும்: ஆட்சியர் வேண்டுகோள்
சனி 5, ஜூலை 2025 12:41:12 PM (IST)

திருமணமான 6 மாதத்தில் புதுப்பெண் மர்ம மரணம் : தாய் புகார் - போலீஸ் விசாரணை!!
சனி 5, ஜூலை 2025 10:48:06 AM (IST)

இரணியல் அரண்மனை பழைமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு வருகிறது : ஆட்சியர் அழகுமீனா தகவல்
வெள்ளி 4, ஜூலை 2025 5:36:19 PM (IST)

கிஷ் தீவில் சிக்கி தவிக்கும் குமரி மீனவர்களை மீட்க வேண்டும்: விஜய் வசந்த் எம்.பி கோரிக்கை
வெள்ளி 4, ஜூலை 2025 10:40:08 AM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் வளர்ச்சி திட்டப் பணிகள்: ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
வியாழன் 3, ஜூலை 2025 10:16:50 AM (IST)

கால்நடைகளுக்கு கால்நோய், வாய்நோய் தடுப்பூசி பணி : ஆட்சியர் துவக்கி வைத்தார்!
புதன் 2, ஜூலை 2025 3:41:45 PM (IST)
