» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
அடிதடி வழக்குகளில் தொடர்புடைய 2பேர் குண்டர் சட்டத்தில் கைது!
சனி 18, மே 2024 5:01:30 PM (IST)
கன்னியாகுமரி மாவட்டத்தில் கொலை முயற்சி, அடிதடி வழக்குகளில் தொடர்புடைய 2 வாலிபர்கள் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
நாகர்கோவில் புன்னை நகரை சேர்ந்தவர் நவீன்குமார் (30), தொழிலாளி. இவர் மீது நேசமணி நகர், கோட்டார் ஆகிய போலீஸ் நிலையங்களில் கொலை முயற்சி, அடிதடி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. எனினும் போலீசாரின் எச்சரிக்கையை மீறி இவர்கள் தொடர்ந்து குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததால் நவீன்குமாரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய எஸ்பி சுந்தரவதனம் ஆட்சியர் ஸ்ரீதரிடம் பரிந்துரை செய்தார்.
அதனை ஆட்சியர் ஏற்றுக் கொண்டு நவீன்குமாரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதேபோல சரலூர் பகுதியை சேர்ந்த அஜய் கண்ணன் (23) என்பவர் மீது நேசமணி நகர் காவல் நிலையத்தில் கொலை முயற்சி, அடிதடி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. அவரையும் எஸ்பி உத்தரவின் பேரில் குண்டர் சட்டத்தில் கைது செய்ய ஆட்சியர் உத்தரவிட்டார். இதையடுத்து 2பேரையும் போலீசார் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர். இந்த ஆண்டில் மட்டும் குண்டர் சட்டத்தின் கீழ் இதுவரை மொத்தம் 23பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தக்கலையில் 20 கிலோ கஞ்சா பறிமுதல்: வாலிபர் கைது!
வியாழன் 19, மார்ச் 2026 8:05:55 PM (IST)

குமரி வெங்கடாஜலபதி கோவிலில் தெலுங்கு வருடப்பிறப்பு விழா: திரளான பக்தர்கள் தரிசனம்
வியாழன் 19, மார்ச் 2026 12:54:33 PM (IST)

நாகர்கோவில் நீதிமன்றத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்: மோப்ப நாய் உதவியுடன் சோதனை!
புதன் 18, மார்ச் 2026 5:36:41 PM (IST)

கன்னியாகுமரி - ஹைதராபாத் ரயிலை விரைவுப் பாதையில் இயக்கக் கோரிக்கை!
புதன் 18, மார்ச் 2026 4:17:42 PM (IST)

குமரி மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படைகள் சோதனை: இதுவரை ரூ.10.18 லட்சம் பறிமுதல்!
புதன் 18, மார்ச் 2026 12:40:24 PM (IST)

கொல்லங்கோடு பத்திரக்காளி அம்மன் கோயில் திருவிழா: மார்ச் 22-ல் மதுபானக் கடைகள் மூட உத்தரவு
புதன் 18, மார்ச் 2026 12:31:24 PM (IST)

