» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
குமரியில் வாக்குச்சாவடி சீட்டு வழங்கும் பணி : ஆட்சியர் ஸ்ரீதர் துவக்கி வைத்தார்!
திங்கள் 1, ஏப்ரல் 2024 12:05:46 PM (IST)

கன்னியாகுமரி தொகுதியில் வாக்காளர்களுக்கு வாக்குச்சாவடி சீட்டு வழங்கும் பணியினை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் துவக்கி வைத்தார்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி வரும் ஏப்ரல் 19ம் தேதி கன்னியாகுமரி பாராளுமன்ற பொதுத்தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடத்துவதற்கான அனைத்து முன்னேற்பாடு பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக கன்னியாகுமரி பாராளுமன்ற பொதுத்தேர்தலில் நாகர்கோவில் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வெட்டூர்ணிமடம், 84வது வாக்குச் சாவடியில் வாக்களிக்கவுள்ள பரமேஷ்வரன் தெருவைச்சார்ந்த வாக்காளர்களுக்கு மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர், வாக்குச்சாடி சீட்டினை இன்று (01.04.2024) வாக்காளர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில் உதவி தேர்தல் அலுவலர் மற்றும் நாகர்கோவில் கோட்டாட்சியர் செல்வி.எஸ்.காளீஸ்வரி, அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியர் அனில்குமார், கிராமநிர்வாக அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கழகத்தை காக்க சின்னம்மாவை அழைத்து வாருங்கள் : நாகர்கோவிலில் பரபரப்பு போஸ்டர்!
வியாழன் 6, நவம்பர் 2025 11:02:51 AM (IST)

அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியை வீட்டில் 57 பவுன் நகை திருட்டு : போலீஸ் விசாரணை!
புதன் 5, நவம்பர் 2025 12:53:45 PM (IST)

ரயில் நிலையத்தில் ரீல்ஸ் வெளியிட்ட 5 பேர் மீது வழக்கு: ரயில்வே பாதுகாப்பு படை அதிரடி!
புதன் 5, நவம்பர் 2025 12:37:01 PM (IST)

வாக்குரிமையை பாதுகாக்க வேண்டியது நம் கடமை: விஜய் வசந்த் எம்.பி அறிக்கை
செவ்வாய் 4, நவம்பர் 2025 9:25:05 PM (IST)

வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்தம் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம்
திங்கள் 3, நவம்பர் 2025 8:19:38 PM (IST)

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: 3 முறை நேரில் சென்று விசாரிக்க அறிவுறுத்தல்
சனி 1, நவம்பர் 2025 5:36:12 PM (IST)


.gif)