» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காத ஊராட்சி மன்றத் தலைவர் மீது கிராம மக்கள் புகார்!
திங்கள் 12, பிப்ரவரி 2024 11:22:37 AM (IST)

மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காத மேலஅரசடி ஊராட்சி மன்றத் தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக கிராம மக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் அளித்துள்ள மனு: தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் வட்டம், மேலஅரசடி ஊராட்சி மன்றத் தலைவர் ரோகிணிராஜ் என்பவர் பதவியேற்ற நாளில் இருந்து இன்று வரை எந்த விதமான அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கவில்லை. ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் உள்ள மினிவிசை பம்பு சின்டெக்ஸ் டேங்க் பழுது அடைந்து தண்ணீர் வீணாக சிந்தி வருகிறது.
இதை நாங்கள் ஊராட்சி மன்றத் தலைவரிடம் பலமுறை சொல்லியும் இதுவரை செய்து தரவில்லை. மேலும் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர், ஓட்டப்பிடாரம் ஒன்றிய பெருந்தலைவர் நேரில் வந்து சின்டெக்ஸ் டேங்கை பார்த்து விட்டு பழுது நீக்கம் செய்யச்சொல்லி ஊராட்சி மன்றத்தலைவரிடம் சொல்லியும் பழுது நீக்கம் செய்யவில்லை.
தெரு விளக்கு, பொது சுகாதாரம் ஆகிய அடிப்படை வசதிகளும் செய்து தரவில்லை. ஊராட்சிமன்றத் தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்கள் கருத்து
ராமர்Feb 12, 2024 - 03:16:13 PM | Posted IP 172.7*****
சீயான் நகர் வீட்டுமனைகள் தண்ணீர் வழங்கப்படாது என்பதை திருத்தம் செய்துள்ளர்கள்
மேலும் தொடரும் செய்திகள்

கால்நடைகளுக்கு கால்நோய், வாய்நோய் தடுப்பூசி பணி : ஆட்சியர் துவக்கி வைத்தார்!
புதன் 2, ஜூலை 2025 3:41:45 PM (IST)

குமரி மாவட்டத்தில் 3 அரசியல் கட்சிகளின் அங்கீகாரம் ரத்து : தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!
செவ்வாய் 1, ஜூலை 2025 10:49:52 AM (IST)

இஸ்ரோ இன்ஜினியர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை: குடும்ப பிரச்சினையால் விபரீத முடிவு!
செவ்வாய் 1, ஜூலை 2025 8:34:20 AM (IST)

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி சேர்க்கை கால நீடிப்பு!
திங்கள் 30, ஜூன் 2025 5:48:59 PM (IST)

தனியார் மருத்துவமனையில் ஆட்சியர் ஆய்வு!
திங்கள் 30, ஜூன் 2025 4:04:27 PM (IST)

இணையதளம் மூலமாக மட்டுமே சுகாதார சான்றிதழ் வழங்கப்படும் : ஆட்சியர் தகவல்
திங்கள் 30, ஜூன் 2025 12:19:27 PM (IST)

RamarFeb 12, 2024 - 03:26:43 PM | Posted IP 172.7*****