» செய்திகள் - விளையாட்டு » உலகம்
தமிழகத்திலிருந்து கடத்தப்பட்ட 3 பழங்கால சிலைகளை இந்தியாவிடம் ஒப்படைக்கிறது ஆஸ்திரேலியா!
வியாழன் 9, ஜூலை 2026 4:44:33 PM (IST)

தமிழகக் கோவில்களில் இருந்து கடத்தப்பட்ட பழங்காலத் திரிசூலத்துடன் கூடிய பத்ரகாளி அம்மன் சிலை, நந்தி சிலை மற்றும் கார்த்திகேயன் சிலை ஆகியவற்றை இந்தியத் தொல்லியல் துறையிடம் ஆஸ்திரேலிய அரசு ஒப்படைக்க உள்ளது.
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்தியப் பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் அந்தோணி அல்பானீசை நேரில் சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து விவாதித்தார். இந்த உயர்மட்டச் சந்திப்பில், தமிழகத்திலிருந்து கடத்தப்பட்ட பழங்காலச் சிலைகளை மீண்டும் இந்தியாவிடமே முறைப்படி ஒப்படைப்பதற்கான முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
மீட்கப்படும் சிலைகளின் தொல்லியல் விபரங்கள்:
பத்ரகாளி அம்மன் திரிசூலம்: சக்தியின் உக்கிர வடிவமான பத்ரகாளி அம்மன் உருவம் கொண்ட இந்த உலோகத் திரிசூலம், தென்னிந்தியக் கோவில் வழிபாட்டிற்காக வடிவமைக்கப்பட்டதாகும். சைவ சக்தி மரபுகளில் பாதுகாப்பு, தீமையை அழித்தல், தெய்வீக ஆற்றல் ஆகியவற்றைப் பிரதிபலிக்கும் இச்சிற்பமானது, தமிழகத்தின் திருவாரூர் மாவட்டம் கொல்லுமாங்குடியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலைச் சேர்ந்ததாகும். இக்கோவில் கிபி 13 முதல் 16-ஆம் நூற்றாண்டு வரையிலான பிற்காலச் சோழர் காலம் முதல் விஜயநகர நாயக்கர் காலம் வரையிலான இடைப்பட்ட காலத்தில் கட்டப்பட்டதாகும்.
நந்தி கற்சிலை: தமிழ் சைவக் கோவில் மரபில் நேர்த்தியான அலங்கார வேலைப்பாடுகளுடன் செதுக்கப்பட்டுள்ள இந்த நந்தி கற்சிலையும், திருவாரூர் மாவட்டம் கொல்லுமாங்குடி கிராமத்தில் உள்ள ஸ்ரீ காசி விஸ்வநாதசுவாமி கோவிலுக்குச் சொந்தமானதாகும். சிவனின் வாகனமான நந்தியை இச்சிலை பிரதிபலிக்கிறது.
ஆறுமுக கார்த்திகேயன் கற்சிலை: ஞானம், வீரம், தெய்வீகப் பாதுகாப்பைப் பறைசாற்றும் வகையில் ஆறு தலைகளுடன் செதுக்கப்பட்டுள்ள இந்த கார்த்திகேயன் கற்சிலை, தமிழகத்தின் மானம்பாடி நாகநாதசாமி கோவிலைச் சேர்ந்ததாகும். நேர்த்தியான நுணுக்கமான அலங்கார வேலைப்பாடுகளுக்குப் பெயர் பெற்ற சோழர் காலத்தில் இச்சிலை செதுக்கப்பட்டுள்ளது. இக்கோவிலானது கிபி 11-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் புகழ்பெற்ற ராஜேந்திர சோழன் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வளைகுடாவில் உச்சக்கட்ட போர் பதற்றம்: வணிகக் கப்பல்கள் மீது தாக்குதல் - இந்தியா கவலை!
வியாழன் 9, ஜூலை 2026 10:33:33 AM (IST)

ஈரானுடன் இனி பேச்சுவார்த்தை நடத்த முடியாது: நேட்டோ மாநாட்டில் ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு!
புதன் 8, ஜூலை 2026 3:59:06 PM (IST)

அமெரிக்காவின் அழுத்தத்தையும் மீறி கமேனி இறுதிச் சடங்கில் பங்கேற்பு: இந்தியாவுக்கு ஈரான் நன்றி!
புதன் 8, ஜூலை 2026 12:43:48 PM (IST)

இந்தோனேசியாவில் ஐஐஎம் பெங்களூரு சர்வதேச வளாகம்: ஜகார்த்தாவில் பிரதமர் மோடி அறிவிப்பு!
புதன் 8, ஜூலை 2026 10:23:55 AM (IST)

பிரிவினைவாதிகளின் குற்றச்செயல்களுக்கு இடம் இல்லை: இந்தியாவிடம் நியூசிலாந்து பிரதமர் உறுதி!
செவ்வாய் 7, ஜூலை 2026 12:26:02 PM (IST)

இலங்கையில் 2-வது நாளாக நீடித்த சிறை மோதல்: 25 பேர் பலி; 100-க்கும் மேற்பட்டோர் படுகாயம்!!
செவ்வாய் 7, ஜூலை 2026 8:54:53 AM (IST)


