» செய்திகள் - விளையாட்டு » உலகம்

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு: தமிழக மாணவி உட்பட 4 பேர் பலி - கொலையாளி சுட்டுக்கொலை!

செவ்வாய் 3, மார்ச் 2026 5:00:56 PM (IST)



அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் ஆஸ்டின் நகரில் உள்ள பொழுதுபோக்கு மையத்தில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், தமிழகத்தைச் சேர்ந்த மாணவி உட்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் ஆஸ்டின் நகரில் உள்ள மக்கள் அதிகம் கூடும் பொழுதுபோக்கு மையத்திற்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர், அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாகத் துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இருப்பினும், சிகிச்சை பலனின்றி தமிழக மாணவி உட்பட 4 பேர் உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்களில் தமிழகத்தைச் சேர்ந்த சவீதா சண்முகசுந்தரம் என்ற மாணவியும் ஒருவர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம், நிர்வாகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த இரட்டைப் பட்டப்படிப்பு பயின்று வந்தார்.

இன்னும் சில மாதங்களில் தனது படிப்பை முடிக்கவிருந்த நிலையில் இந்தத் துயரம் நிகழ்ந்துள்ளது. மேலும், அவர் அடுத்த வாரமே புதிய பணியில் சேரவிருந்தார் என்ற உருக்கமான தகவல் வெளியாகியுள்ளது.

துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை போலீசார் சம்பவ இடத்திலேயே சுட்டுக்கொன்றனர். விசாரணையில் அவர் செனகல் நாட்டைச் சேர்ந்த அமெரிக்கக் குடிமகனான நிடியாகா டியாக்னே (54) என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதல் ஒரு திட்டமிட்ட பயங்கரவாதத் தாக்குதலாக இருக்கலாம் என போலீசார் சந்தேக்கின்றனர். இது தொடர்பாக அமெரிக்கப் புலனாய்வுத் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory