» செய்திகள் - விளையாட்டு » உலகம்
உளவுத்துறை எச்சரிக்கை எதிரொலி: குப்பையில் வீசப்பட்ட சீன அரசின் பரிசு பொருட்கள்!
திங்கள் 18, மே 2026 5:40:25 PM (IST)

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவருடன் சென்ற உலகப் புகழ்பெற்ற தொழிலதிபர்களுக்குச் சீன அரசு வழங்கிய விலையுயர்ந்த பரிசுப் பொருட்கள் அனைத்தும், உளவுத்துறை எச்சரிக்கை காரணமாகப் பீஜிங் விமான நிலையக் குப்பைத் தொட்டியில் வீசி எறியப்பட்ட சம்பவம் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது இரண்டு நாள் அதிகாரப்பூர்வச் சீனப் பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று ஏர்போர்ஸ் ஒன் (Air Force One) விமானம் மூலம் வாஷிங்டன் திரும்பினார். அதிபரின் இந்தப் பயணத்தில் டெஸ்லா நிறுவனத் தலைவர் எலான் மஸ்க், ஆப்பிள் நிறுவனத் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக், என்விடியா (Nvidia) சிப் நிறுவனத் தலைவர் ஜென்சன் ஹூவாங் உள்ளிட்ட அமெரிக்காவின் முன்னணித் தொழில் அதிபர்கள் மற்றும் உயர் பாதுகாப்பு அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
பயணத்தின் நிறைவாக, சீன அரசு அதிகாரிகள் தரப்பில் அதிபர் டிரம்ப் மற்றும் அவரது குழுவினருக்குப் பல்வேறு விசேஷப் பரிசுகளும், நினைவுப் பொருட்களும் முறைப்படி வழங்கப்பட்டன. ஆனால், டிரம்ப் மற்றும் அவரது குழுவினர் தங்களுக்கு வழங்கப்பட்ட அனைத்துப் பரிசுப் பொருட்களையும், பீஜிங் சர்வதேச விமான நிலையத்திலேயே ஆங்காங்கே இருந்த குப்பைத் தொட்டிகளில் அப்படியே வீசிவிட்டு விமானத்தில் ஏறியுள்ளனர்.
அமெரிக்க வரலாற்றில் எப்போதும் இல்லாத இந்த அதிரடி நடவடிக்கைக்குப் பின்னால் இருக்கும் தீவிரப் பாதுகாப்பு காரணங்களை உளவுத்துறை வட்டாரங்கள் தற்போது வெளியிட்டுள்ளன. சீன அரசு வழங்கிய மின்னணு சாதனங்கள் அல்லது கலைப் பொருட்களுக்குள் அமெரிக்கத் தொழில்நுட்ப ரகசியங்களை உளவு பார்ப்பதற்கான அதிநவீன 'ஸ்பைவேர்' (Spyware) மென்பொருட்கள், ரகசியக் கண்காணிப்பு சிப்கள் (Chips) அல்லது ஹேக்கிங் கருவிகள் ஏதேனும் நுட்பமாக மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்திருந்தனர்.
குறிப்பாக, உலகச் சிப் சந்தையைக் கட்டுப்படுத்தும் என்விடியா தலைவர் மற்றும் ஆப்பிள், டெஸ்லா நிறுவனத் தலைவர்களின் ரகசியத் தரவுகளைத் திருடச் சீனா திட்டமிட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், எவ்விதச் பரிசோதனைக்கும் இடமளிக்காமல் ஒட்டுமொத்தப் பொருட்களையும் குப்பையில் வீச டிரம்ப் உத்தரவிட்டதாகத் தெரிகிறது. இதுதொடர்பான வீடியோ மற்றும் புகைப்படக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி தற்போது உலகளவில் காட்டுத்தீயாய் பரவி வருகின்றன.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வியத்நாமில் படகு கவிழ்ந்து கோர விபத்து: தமிழர் உட்பட 15 இந்தியர்கள் பலி!
சனி 11, ஜூலை 2026 5:50:04 PM (IST)

இந்தியா - நியூஸிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் வரலாற்று மைல்கல்: பிரதமர் மோடி பெருமிதம்!
சனி 11, ஜூலை 2026 12:21:14 PM (IST)

நியூசிலாந்து சென்றடைந்தார் பிரதமர் மோடி: 40 ஆண்டுகளுக்குப் பின் வரலாற்றுப் பயணம்!
வெள்ளி 10, ஜூலை 2026 4:54:38 PM (IST)

தமிழகத்திலிருந்து கடத்தப்பட்ட 3 பழங்கால சிலைகளை இந்தியாவிடம் ஒப்படைக்கிறது ஆஸ்திரேலியா!
வியாழன் 9, ஜூலை 2026 4:44:33 PM (IST)

வளைகுடாவில் உச்சக்கட்ட போர் பதற்றம்: வணிகக் கப்பல்கள் மீது தாக்குதல் - இந்தியா கவலை!
வியாழன் 9, ஜூலை 2026 10:33:33 AM (IST)

ஈரானுடன் இனி பேச்சுவார்த்தை நடத்த முடியாது: நேட்டோ மாநாட்டில் ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு!
புதன் 8, ஜூலை 2026 3:59:06 PM (IST)


