» செய்திகள் - விளையாட்டு » உலகம்
இந்தியாவில் இருந்து சீனா சென்ற எண்ணெய் கப்பல்.. 2021ம் ஆண்டிற்கு பிறகு முதல்முறை!
வியாழன் 14, ஆகஸ்ட் 2025 5:39:32 PM (IST)
இந்தியாவில் இருந்து 2021ம் ஆண்டிற்கு பிறகு முதன்முறையாக எண்ணெய் கப்பல் சீனாவுக்கு சென்றுள்ளது.
உக்ரைன் போரில் ரஷ்யா மீது ஐரோப்பிய ஒன்றியம் புதிதாக விதித்த தடைகள் காரணமாக இந்திய, ரஷ்ய கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனமான நயாரா நிறுவனமும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் நாயரா நிறுவனத்தின் எண்ணெய் கப்பல்கள் பல்வேறு துறைமுகங்களில் நிறுத்தப்பட்டுள்ளன. இதனிடையே குஜராத்தின் வடினார் துறைமுகத்தில் இருந்து நயாரா நிறுவன எண்ணெய் கப்பல் சீனா புறப்பட்டது.
மலேசியாவிற்கு செல்ல வேண்டிய கப்பல், பொருளாதார தடைகளால் சீனாவின் சூஷான் துறைமுகத்திற்கு செல்கிறது. இதன் மூலம் இந்தியாவில் இருந்து 5 லட்சம் பேரல் டீசல் சீனாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ளது. லடாக் எல்லை பிரச்சனை காரணமாக இந்தியா - சீனா உறவு பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், 2021ம் ஆண்டுக்கு பிறகு இந்திய எண்ணெய் கப்பல் சீனாவிற்கு சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ரஷ்ய எண்ணெய் நிறுவனங்கள் மீது பொருளாதார தடை விதித்தது அமெரிக்கா
வியாழன் 23, அக்டோபர் 2025 4:21:51 PM (IST)

பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் மோதலுக்கு இந்தியா காரணமா? ஆப்கானிஸ்தான் பதிலடி
புதன் 22, அக்டோபர் 2025 12:24:10 PM (IST)

ஜப்பானின் முதல் பெண் பிரதமராக சனே தகைச்சி தேர்வு!
செவ்வாய் 21, அக்டோபர் 2025 5:20:01 PM (IST)

வர்த்தக ஒப்பந்தம் செய்யாவிட்டால் 155 சதவீதம் வரி: சீனாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை!
செவ்வாய் 21, அக்டோபர் 2025 12:53:30 PM (IST)

ஆப்கானிஸ்தான் எல்லையில் பாகிஸ்தான் வான்வழி தாக்குதல்: 3 கிரிக்கெட் வீரர்கள் உள்பட 8 பேர் பலி
சனி 18, அக்டோபர் 2025 10:46:45 AM (IST)

ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதாக மோடி உறுதி கூறினார்: டிரம்ப் பேட்டி!
வியாழன் 16, அக்டோபர் 2025 3:31:02 PM (IST)


.gif)