» செய்திகள் - விளையாட்டு » உலகம்
அமெரிக்காவில் பல மாகாணங்களை பந்தாடிய பனிப்புயல்: இயல்புவாழ்க்கை பாதிப்பு
செவ்வாய் 1, ஏப்ரல் 2025 8:11:12 AM (IST)
அமெரிக்காவின் பல மாகாணங்களை புயல் பந்தாடியது. இதனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் 4 லட்சம் பேர் இருளில் மூழ்கினர்.
காலநிலை மாற்றம் என்பது தற்போதைய உலகம் சந்திக்கும் மிகப்பெரும் பிரச்சினை ஆகும். இதன் காரணமாக புவி வெப்பமயமாதல், நிலநடுக்கம், சுனாமி உள்ளிட்ட பல்வேறு இயற்கை பேரிடர்கள் ஏற்படுகின்றன. இதனால் ஏற்படும் பாதிப்புக்கு வளர்ந்த நாடுகள் மட்டும் விதிவிலக்கல்ல. அதன்படி அமெரிக்காவில் புயல் காற்றுடன் கூடிய கனமழை பெய்யும் என அந்த நாட்டின் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
அதன்படி அங்குள்ள இஸ்கான்சின், மிச்சிகன், இண்டியான ஆகிய மாகாணங்களை கடுமையான பனிப்புயல் தாக்கியது. இதனை தொடர்ந்து பெய்த கனமழையால் பல நகரங்கள் வெள்ளக்காடாக மாறின. அப்போது பல இடங்களில் மரங்கள் முறிந்து நெடுஞ்சாலையில் விழுந்தன. அதனை அப்புறப்படுத்தும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். எனவே முக்கிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
அதேபோல் அங்குள்ள பல வீடுகள் மற்றும் ஆயிரக்கணக்கான மின்கம்பங்கள் சேதம் அடைந்தன. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இருளில் மூழ்கினர். எனவே மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக முடங்கியது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆபரேஷன் சிந்தூர்: மாஸ்கோவில் ரஷிய அரசிடம் இந்திய எம்.பி.க்கள் குழு விளக்கம்!
வெள்ளி 23, மே 2025 4:37:27 PM (IST)

சீனாவில் 650 ஆண்டுகள் பழமையான கோபுரம் இடிந்து விழுந்தது: சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி
வெள்ளி 23, மே 2025 12:20:10 PM (IST)

இந்தியா - பாகிஸ்தான் சண்டையை நிறுத்தியது அமெரிக்காவா? ஜெய்சங்கர் விளக்கம்!
வியாழன் 22, மே 2025 5:48:39 PM (IST)

காசாவில் மக்கள் உணவின்றி தவிப்பு! மனிதாபிமான உதவிகளை அனுமதிக்க வேண்டும்: போப் லியோ
வியாழன் 22, மே 2025 5:27:06 PM (IST)

இலங்கையில் இறுதிப் போா் நினைவு நாள்: 12,400 ராணுவத்தினருக்கு பதவி உயா்வு
புதன் 21, மே 2025 11:02:26 AM (IST)

உக்ரைனுக்கு எதிரான போரை நிறுத்த தயார்: ட்ரம்புடன் பேசிய ரஷ்ய அதிபர் அறிவிப்பு!
புதன் 21, மே 2025 10:28:05 AM (IST)
