» செய்திகள் - விளையாட்டு » உலகம்
அமெரிக்க தேர்தலில் வாக்களிக்கும் முறையில் மாற்றம்: அதிபர் டிரம்ப் அதிரடி உத்தரவு
புதன் 26, மார்ச் 2025 8:31:01 PM (IST)
அமெரிக்க அதிபர் டிரம்ப், தான் பதவியேற்றது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். குறிப்பாக குடியேற்றம், வரி விதிப்பு உள்ளிட்டவற்றில் பல உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார்.

தேர்தல் நாளுக்குப் பிறகு பெறப்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை ஏற்றுக்கொள்ள தடை விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வாக்காளர் பட்டி யல்கள் உள்ளிட்ட விவரங்களை கூட்டாட்சி நிறுவனங்களுடன் மாகாணங்கள் பகிர்ந்து கொள்ள வலியுறுத்தப்பட்டுள்ளது. இதற்கு தேர்தல் அதிகாரிகள் இணங்க மறுத்தால் மாகாண நிதி நிறுத்தத்தை எதிர்கொள்ள நேரிடும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து டிரம்ப் கூறும் போது, நவீன, வளர்ந்த, வளரும் நாடுக ளால் பயன்படுத்தப்படும் அடிப்படை மற்றும் தேவையான தேர்தல் பாதுகாப்பு களை செயல்படுத்த அமெ ரிக்கா தவறிவிட்டது. இந்தியாவும் பிரேசிலும் வாக்காளர் அடையாளத்தை ஒரு பயோ–மெட்ரிக் தரவுத் தளத்துடன் இணைக்கின் றன. அதே நேரத்தில் அமெரிக்கா பெரும்பாலும் குடியுரி–மைக்கான சுய சான்றளிப்பை நம்பியுள்ளது. இந்த உத்தரவு மூலம் தேர்தல் மோசடி முடிவுக்கு வரும் என்று நம்புகிறோம் என்றார்.
கடந்த 2020-ம் ஆண்டு நடந்த தேர்தலில் ஜோபைட னிடம் தோல்வி அடைந்த டிரம்ப், தேர்தலில் மோசடி நடந்ததாக கூறி தனது தோல்வியை ஏற்க மறுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்கு குடியுரிமை அனைவருக்கும் கட்டாயமாக்கப் பட்டுள்ளதால் குடியுரிமை அல்லாமல் வாக்களிப்பது சட்டவிரோதமானது என்றும், அவர்கள் நாடு கடத்தப்படவும் வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை வாக்கா–ளர்களின் வாக்குரிமையைப் பறிக்கக்கூடும் என்று வாக்காளர்களுக்கான உரிமைக் குழுக்கள் கவலை தெரிவித்துள்ளன. மேலும்,அமெரிக்க குடிமக்களில் 9 சதவிகிதம் பேருக்கு (அதாவது சுமார் 2.13 கோடி பேருக்கு) குடியுரிமை இல்லை என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆபரேஷன் சிந்தூர்: மாஸ்கோவில் ரஷிய அரசிடம் இந்திய எம்.பி.க்கள் குழு விளக்கம்!
வெள்ளி 23, மே 2025 4:37:27 PM (IST)

சீனாவில் 650 ஆண்டுகள் பழமையான கோபுரம் இடிந்து விழுந்தது: சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி
வெள்ளி 23, மே 2025 12:20:10 PM (IST)

இந்தியா - பாகிஸ்தான் சண்டையை நிறுத்தியது அமெரிக்காவா? ஜெய்சங்கர் விளக்கம்!
வியாழன் 22, மே 2025 5:48:39 PM (IST)

காசாவில் மக்கள் உணவின்றி தவிப்பு! மனிதாபிமான உதவிகளை அனுமதிக்க வேண்டும்: போப் லியோ
வியாழன் 22, மே 2025 5:27:06 PM (IST)

இலங்கையில் இறுதிப் போா் நினைவு நாள்: 12,400 ராணுவத்தினருக்கு பதவி உயா்வு
புதன் 21, மே 2025 11:02:26 AM (IST)

உக்ரைனுக்கு எதிரான போரை நிறுத்த தயார்: ட்ரம்புடன் பேசிய ரஷ்ய அதிபர் அறிவிப்பு!
புதன் 21, மே 2025 10:28:05 AM (IST)
