» செய்திகள் - விளையாட்டு » உலகம்
சிறுமிகள் பாலியல் குற்றவாளிக்கு பொது மன்னிப்பு: ஹங்கேரி அதிபர் ராஜினாமா
திங்கள் 12, பிப்ரவரி 2024 8:13:47 AM (IST)
ஹங்கேரியில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றவாளிக்கு பொது மன்னிப்பு வழங்கியதற்காக அதிபர் கடாலின் நோவக் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

ஆனால் அந்த நபருக்கு அதிபர் கடாலின் நோவக் தனது அதிகாரத்தை பயன்படுத்தி பொது மன்னிப்பு வழங்கினார். இதற்கு அப்போதைய சட்டத்துறை மந்திரியாக இருந்த ஜூடிட் வர்காவும் அனுமதி அளித்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து அதிபர் பதவி விலக வேண்டும் என பொதுமக்கள் போராட்டத்தில் குதித்தனர்.
இந்தநிலையில் அதிபர் கடாலின் நோவக் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். இதுகுறித்து அரசு தொலைக்காட்சியில் அவர் பேசுகையில் `கருணையின் அடிப்படையிலும், அந்த நபர் குற்றத்தை செய்யவில்லை என தான் நம்பியதாலும் பொது மன்னிப்பு வழங்கினேன். ஆனால் நான் தவறு இழைத்து விட்டேன். அதற்கு பொறுப்பேற்று பதவி விலகுகிறேன். மேலும் நாட்டு மக்கள் அனைவரிடமும் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்' என கூறினார்.
இதனைதொடர்ந்து அப்போது சட்டத்துறை மந்திரியாக இருந்த ஜூடிட் வர்காவும் தனது அரசியல் வாழ்க்கையில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இவர் தற்போது ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் தலைவருக்கான பட்டியலில் உள்ளார். இது ஹங்கேரி நாட்டு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இந்தியா உடனான போர் நிறுத்தத்தில் டிரம்ப் தலையீடு இல்லை: பாகிஸ்தான் அமைச்சர்
புதன் 17, செப்டம்பர் 2025 5:26:19 PM (IST)

நண்பர் மோடி பிறந்தநாளில் ஓர் அற்புதமான தொலைபேசி உரையாடல்: ட்ரம்ப் நெகிழ்ச்சி!
புதன் 17, செப்டம்பர் 2025 12:04:25 PM (IST)

நாய் என திட்டியதால் பெண் ஊழியர் தற்கொலை: குடும்பத்துக்கு ரூ.90 கோடி இழப்பீடு
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 10:27:31 AM (IST)

இங்கிலாந்தில் புலம்பெயர்ந்தோர் குடியேற்றத்துக்கு எதிராக பொதுமக்கள் மாபெரும் போராட்டம்!!
திங்கள் 15, செப்டம்பர் 2025 11:33:58 AM (IST)

பின்லேடன் உங்கள் நாட்டில்தான் கொல்லப்பட்டார் : ஐ.நா. சபையில் பாக். மீது இஸ்ரேல் தாக்கு!
சனி 13, செப்டம்பர் 2025 5:04:44 PM (IST)

ரஷியாவில் ரிக்டர் 7.4 அளவில் பயங்கர நிலநடுக்கம்
சனி 13, செப்டம்பர் 2025 12:34:05 PM (IST)
