» செய்திகள் - விளையாட்டு » உலகம்

பிரான்ஸ் அருங்காட்சியகத்தில் ரூ.898 கோடி பொருட்களை கொள்ளையடித்த 2 பேர் கைது

திங்கள் 27, அக்டோபர் 2025 8:58:03 AM (IST)



பிரான்ஸ் அருங்காட்சியகத்தில் ரூ.898 கோடி பொருட்களை கொள்ளையடித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். 

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் மிகப்பெரிய லூவ்ரே அருங்காட்சியகம் அமைந்துள்ளது. ஈபிள் கோபுரத்துக்கு அடுத்தபடியாக அதிகளவில் சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் இடமாக இது திகழ்கிறது. கடந்த வாரம் இந்த அருங்காட்சியகத்தில் முகமூடியுடன் சிலர் நுழைந்தனர். பின்னர் மின் கருவிகளை பயன்படுத்தி வைர கிரீடம் உள்ளிட்ட விலைமதிப்பு மிக்க பொருட்களை கொள்ளையடித்து விட்டு தப்பி ஓடினர். 

அவற்றின் மதிப்பு சுமார் ரூ.898 கோடி ஆகும். பட்டப்பகலில் நடைபெற்ற இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை போலீசார் வலைவீசி தேடி வந்தனர். இந்தநிலையில் சார்லஸ் டி கோல் விமான நிலையத்தில் இருந்து குற்றவாளிகள் வெளிநாடு தப்பி செல்ல முயற்சிப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு விரைந்த போலீசார் 2 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory