» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
டெல்லி முதல்-அமைச்சர் மீது தாக்குதல்: கைதான வாலிபருக்கு 5 நாட்கள் போலீஸ் காவல்!
வியாழன் 21, ஆகஸ்ட் 2025 10:45:20 AM (IST)
டெலலியில் முதல்-அமைச்சரை தாக்கிய வழக்கில் கைதான வாலிபரை 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முதல்-மந்திரி வீடு, ஷாலிமார் பாக்கில் உள்ளது. முதல்-மந்திரியிடம் குறைகளை தெரிவிக்க ஏராளமானோர் நேற்று காலை வந்திருந்தனர். அப்போது சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் முதல்-மந்திரி முன்னால் வந்து தனது கைகளில் இருந்த காகிதங்களை கிழித்து முதல்-மந்திரி மீது வீசினார். தொடர்ந்து முதல்-மந்திரியின் கைகளைப் பிடித்து வேகமாக இழுத்தார்.
இதில் முதல்-மந்திரியின் தலை, அருகில் இருந்த மேஜை மீது மோதியது. இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. யாரும் எதிர்பாராத நேரத்தில், சில நொடிகளில் இது நடந்து முடிந்து விட்டது. உடனே சுதாரித்துக்கொண்ட பாதுகாப்பு அதிகாரிகள் அந்த நபரை சுற்றி வளைத்துப் பிடித்து கைது செய்தனர். பின்னர் அவர் விசாரணைக்காக கொண்டு செல்லப்பட்டார். முதல்-மந்திரி ரேகா குப்தா, ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
முதல்-மந்திரியை தாக்கிய நபர் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் அவர் குஜராத் மாநிலம் ராஜ்கோட் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் கிம்ஜி சகாரியா (வயது 41) என்பதும், அவர் ஒரு நாய் பிரியர் என்பதும் தெரிய வந்தது. சமீபத்தில் தெருநாய்களுக்கு எதிராக வந்த கோர்ட்டு உத்தரவு அவரை மிகவும் பாதித்து இருந்தது. இதனால் மன நல பாதிப்பில் இருந்ததாகவும் தெரிகிறது. ராஜேசின் தாயாரும் இதனை போலீசில் தெரிவித்து உள்ளார்.
ஆனால் முதல்-மந்திரியின் வீட்டில் பதிவான கண்காணிப்பு கேமரா பதிவுகள், அவரது நடவடிக்கையை வேறுவிதமாக காட்டுகின்றன. அவர் திட்டமிட்டே இந்த தாக்குதலை நடத்தியதாக அந்த காட்சிகள் காண்பிக்கின்றன. 24 மணி நேரத்துக்கு முன்னதாகவே இந்த சதித்திட்டத்தை அவர் தீட்டிவிட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து கைது செய்யப்பட்ட ராஜேஷை டெல்லியின் துவாரகாவில் உள்ள ஒரு நீதிபதியின் வீட்டில் போலீசார் ஆஜர்படுத்தப்படுத்தினர். அவரை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் அனுமதி கேட்ட நிலையில், குற்றவாளிக்கு 5 நாட்கள் போலீஸ் காவல் அளித்து நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து போலீசார் அவரை விசாரணைக்கு அழைத்து சென்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காஷ்மீர் வைஷ்ணோ தேவி கோவில் யாத்திரையில் துயரம்: நிலச்சரிவில் சிக்கி 34 பக்தர்கள் பலி
வியாழன் 28, ஆகஸ்ட் 2025 8:50:27 AM (IST)

பீகாரில் ராகுல் காந்தி நடைபயணம் : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு
புதன் 27, ஆகஸ்ட் 2025 12:31:46 PM (IST)

கேரளாவில் ஐடி ஊழியரை கடத்தி தாக்கிய வழக்கு: நடிகை லட்சுமி மேனன் தலைமறைவு
புதன் 27, ஆகஸ்ட் 2025 12:05:17 PM (IST)

எவ்வளவு நெருக்கடி வந்தாலும் விவசாயிகளை பாதுகாப்பேன்: பிரதமர் மோடி உறுதி!
புதன் 27, ஆகஸ்ட் 2025 11:00:03 AM (IST)

தமிழகத்தில் கொடிக் கம்பங்களை அகற்றும் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை!
திங்கள் 25, ஆகஸ்ட் 2025 5:38:50 PM (IST)

கர்ப்பிணி மனைவியை கொன்று துண்டு, துண்டாக வெட்டி ஆற்றில் வீசிய கணவன்: நகரியில் பயங்கரம்
திங்கள் 25, ஆகஸ்ட் 2025 11:22:44 AM (IST)
