» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

எவ்வளவு நெருக்கடி வந்தாலும் விவசாயிகளை பாதுகாப்பேன்: பிரதமர் மோடி உறுதி!

புதன் 27, ஆகஸ்ட் 2025 11:00:03 AM (IST)



இந்தியா மீது அமெரிக்கா 50% வரி விதித்துள்ள நிலையில், எவ்வளவு நெருக்கடி வந்தாலும் விவ​சா​யிகளைப் பாது​காப்​ப​தில் உறு​தி​யாக இருக்​கிறேன் என்று பிரதமர் நரேந்​திர மோடி ​தெரி​வித்​தார்.  

உலக நாடு​களுக்கு அதி​கபட்ச வரி விதித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இந்​தி​யா​வுக்கு 25 சதவீத வரியை விதித்​தார். உக்​ரைன் மீது போர் தொடுத்​துள்ள ரஷ்​யா​விடம் இருந்து கச்சா எண்​ணெய் வாங்​கு​வ​தால், இந்​தி​யா​வுக்கு கூடு​தலாக 25% வரியை அறி​வித்​தார்.

இதற்​கான உத்​தர​வில் நேற்று ட்ரம்ப் கையெழுத்​திட்​டார். இதையடுத்து அமெரிக்கா​வுக்கு இந்​தி​யா​வில் இருந்து ஏற்​றுமதி செய்​யப்​படும் பொருட்​களுக்கு மொத்​த​மாக 50 சதவீத வரி விதிக்​கப்​படும். இந்த நடை​முறை இன்று அமலுக்கு வரு​கிறது. இந்​நிலை​யில், குஜ​ராத் மாநிலம் அகம​தா​பாத்​தில் நேற்று நடை​பெற்ற பேரணி மற்​றும் பொதுக் கூட்​டத்​தில் பிரதமர் மோடி பங்​கேற்​றார்.

அப்​போது பிரதமர் மோடி பேசி​ய​தாவது: உலகள​வில் தற்​போது பொருளா​தார ரீதி​யாக அரசி​யல் செய்​வ​தில் ஒவ்​வொரு​வரும் பரபரப்​பாக இருக்​கின்​றனர். ஆனால்​,அகம​தா​பாத் மண்​ணில் இருந்து ஒன்று சொல்​கிறேன். மகாத்மா காந்​தி​யின் மண்​ணில் இருந்து ஒன்று சொல்​கிறேன்.

என்​னுடைய சிறு நிறு​வனங்​களைச் சேர்ந்த சகோ​தர, சகோ​தரி​கள், சிறிய கடை வைத்​துள்ள சகோ​தர, சகோ​தரி​கள், சிறு விவ​சாய சகோ​தர, சகோ​தரி​கள் யாராக இருந்​தா​லும், அவர்​களுக்கு மீண்​டும் மீண்​டும் உறுதி அளிக்​கிறேன். உங்​களு​டைய நலன், உணர்​வு​கள்​தான் இந்த மோடிக்கு முதன்​மை​யானது.

எனது நாட்​டில் சிறு நிறு​வனங்​கள் வைத்​திருப்​பவர்​கள், விவ​சா​யிகளைப் பாது​காப்​ப​தில் உறு​தி​யாக இருக்​கிறேன். அதற்கு தடை​யாக எத்​தனை நெருக்​கடி வந்​தா​லும், அவர்​களின் வாழ்​வா​தா​ரத்தை விட்​டுத்தர மாட்​டேன். அவர்​களுக்கு சிறு கஷ்டம் வரு​வதை என்​னுடைய தலை​மையி​லான அரசு பொறுத்​துக் கொள்​ளாது. எத்​தனை நெருக்​கடி வந்​தா​லும், அவற்றை தாங்​கும் வலிமையை அதி​கரித்து கொண்டே இருப்​போம்.

இன்று ஆத்ம நிர்​பார் பாரத் அபி​யான் திட்​டம் குஜ​ராத்​தில் இருந்து மிகப்​பெரும் சக்​தி​யைப் பெற்​றுள்​ளது. இரு​பது ஆண்டு கடின உழைப்​பின் பலனாக இந்த மாற்​றம் நிகழ்ந்​துள்​ளது. இவ்​வாறு பிரதமர் மோடி உறு​தி​யாக கூறி​னார். முன்​ன​தாக கடந்த சனிக்​கிழமை மத்​திய வெளி​யுறவுத் துறை அமைச்​சர் ஜெய்​சங்​கர் டெல்​லி​யில் பேசும்​போது, ‘‘வர்த்​தகத்​தையே தொழிலாக கொண்​டுள்ள அமெரிக்​கா, மற்ற நாடு​கள் வர்த்​தகம் செய்​வதை குற்​றம் சாட்​டு​வது முரணாக உள்​ளது.

இந்​தி​யா​வின் எண்​ணெய், சுத்​தி​கரிக்​கப்​பட்ட பொருட்​கள் வேண்​டாம் என்​றால், அவற்றை வாங்க வேண்​டாம். இந்​திய பொருட்​களை வாங்க சொல்லி உங்​களை யாரும் கட்​டாயப்​படுத்​த​வில்​லை. ஆனால், ஐரோப்​பிய நாடு​கள் வாங்​கு​கின்​றன. அமெரிக்கா வாங்​கு​கிறது. எனவே, உங்​களுக்கு பிரச்​சினை என்​றால், வாங்​கு​வதை நிறுத்​திக் கொள்​ளுங்​கள்’’ என்​று திட்​ட​வட்​ட​மாக கூறியது குறிப்​பிடத்​தக்​கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory