» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
வாரணாசியில் 3வது தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி : பிரதமர் மோடி பெருமிதம்
சனி 15, பிப்ரவரி 2025 4:07:56 PM (IST)
உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் தமிழ்ச் சங்கமம் நடப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
கலாசார மையங்களாக திகழ்ந்த வாரணாசிக்கும், தமிழகத்திற்கும் இடையேயான பிணைப்பை புதுப்பிக்கும் வகையில், 'காசி தமிழ் சங்கமம்' நிகழ்ச்சி, 2022ம் ஆண்டு முதல் நடந்து வருகிறது. 3வது ஆண்டாக, இன்று (பிப்.,15) துவங்கி, பிப்., 24ம் தேதி வரை நடக்க உள்ளன. இன்று மதியம் நடைபெற்ற தொடக்க விழாவில் மத்திய கல்வி துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த முறை சித்த மருத்துவம், பாரம்பரிய தமிழ் இலக்கியம், தேசத்தின் கலாசார ஒற்றுமை ஆகியவற்றுக்கு அகத்தியர் ஆற்றிய பங்களிப்பை எடுத்துக்காட்டும் விதமாக காசி தமிழ் சங்கமம் நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை, சென்னை ஐ.ஐ.டி., செய்து வருகிறது. இது குறித்து பிரதமர் மோடி கூறியிருப்பதாவது: உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் தமிழ்ச் சங்கமம் நடப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. மகா கும்பமேளாவுக்கு இடையே தமிழ்ச் சங்கமம் நடப்பது முக்கியத்துவம் வாய்ந்தது.
காவிரி-கங்கை, தமிழகத்திற்கும் காசிக்கும் இடையே ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தொடர்பு உள்ளது. காசிக்கு வரும் தமிழக மக்கள் மறக்க முடியாத நினைவுகளுடன் திரும்பிச் செல்லட்டும். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு : நாடாளுமன்ற வளாகத்தில் தமிழக எம்.பிக்கள் ஆர்ப்பாட்டம்!
செவ்வாய் 11, மார்ச் 2025 11:34:06 AM (IST)

தி.மு.க. எம்.பி.க்கள் அநாகரீகமானவர்கள் என பேச்சு: மத்திய அமைச்சருக்கு கனிமொழி எம்.பி. கண்டனம்
திங்கள் 10, மார்ச் 2025 8:25:51 PM (IST)

தமிழக மாணவர்களின் எதிர்காலத்தையும் திமுக அரசு பாழடிக்கிறது: தர்மேந்திர பிரதான் குற்றச்சாட்டு
திங்கள் 10, மார்ச் 2025 12:03:41 PM (IST)

தங்ககடத்தல் வழக்கில் கைது: சிறைக்குள் தூங்காமல் தவிக்கும் நடிகை ரன்யாராவ்!
சனி 8, மார்ச் 2025 9:23:16 PM (IST)

அணை கட்ட அனுமதிக்காவிட்டால் கர்நாடகாவில் தமிழ் படங்கள் ஓடாது: வாட்டாள் நாகராஜ் மிரட்டல்
சனி 8, மார்ச் 2025 4:57:02 PM (IST)

சாவர்க்கர் குறித்து கருத்து: ராகுல் காந்திக்கு ரூ. 200 அபராதம் விதித்த லக்னோ நீதிமன்றம்!
வெள்ளி 7, மார்ச் 2025 12:00:10 PM (IST)
