» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
சாவர்க்கர் குறித்து கருத்து: ராகுல் காந்திக்கு ரூ. 200 அபராதம் விதித்த லக்னோ நீதிமன்றம்!
வெள்ளி 7, மார்ச் 2025 12:00:10 PM (IST)
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு ரூ. 200 அபராதம் விதித்து லக்னோ மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேசியவாதியும் சுதந்திரப் போராட்ட வீரருமான சாவர்க்கர் குறித்து திட்டமிட்டு அவதூறு கருத்துகளை ராகுல் காந்தி பரப்பியதாகவும், அந்த பேட்டி ஊடகங்களில் பரவலாக ஒளிபரப்பட்டதாகவும் வழக்கறிஞர் நிர்பேந்திர பாண்டே தாக்கல் செய்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் ராகுல் காந்தியை விசாரணைக்கு நேரில் ஆஜராக லக்னோ நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் வெளிநாட்டு பிரமுகரை சந்திக்க முன்பே திட்டமிடப்பட்டிருந்த நிகழ்வில் கலந்துகொள்ள வேண்டியுள்ளதால், ராகுல் காந்தி நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரி அவரது வழக்கறிஞர் மனு அளித்தார்.
இந்த மனுவை நிராகரித்த கூடுதல் தலைமை நீதித்துறை நீதிபதி அலோக் வர்மா, நேரில் ஆஜராக தவறியதற்காக ராகுல் காந்திக்கு ரூ. 200 அபராதம் விதித்து உத்தரவிட்டார். மேலும், வழக்கின் விசாரணையை ஏப்ரல் 14-ம் தேதிக்கு ஒத்திவைத்தார். இதே குற்றச்சாட்டில் புனே நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் ராகுல் காந்திக்கு ஜாமீன் வழங்கப்பட்டு, நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பா.ஜனதா மகளிர் அணி பொதுச்செயலாளர் தற்கொலை: உருக்கமான கடிதம் சிக்கியது!
புதன் 12, மார்ச் 2025 11:25:07 AM (IST)

தேசிய கல்விக் கொள்கை: தமிழக அரசின் ஒப்புதல் கடிதத்தை வெளியிட்டார் தர்மேந்திர பிரதான்!
புதன் 12, மார்ச் 2025 10:39:43 AM (IST)

மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு : நாடாளுமன்ற வளாகத்தில் தமிழக எம்.பிக்கள் ஆர்ப்பாட்டம்!
செவ்வாய் 11, மார்ச் 2025 11:34:06 AM (IST)

தி.மு.க. எம்.பி.க்கள் அநாகரீகமானவர்கள் என பேச்சு: மத்திய அமைச்சருக்கு கனிமொழி எம்.பி. கண்டனம்
திங்கள் 10, மார்ச் 2025 8:25:51 PM (IST)

தமிழக மாணவர்களின் எதிர்காலத்தையும் திமுக அரசு பாழடிக்கிறது: தர்மேந்திர பிரதான் குற்றச்சாட்டு
திங்கள் 10, மார்ச் 2025 12:03:41 PM (IST)

தங்ககடத்தல் வழக்கில் கைது: சிறைக்குள் தூங்காமல் தவிக்கும் நடிகை ரன்யாராவ்!
சனி 8, மார்ச் 2025 9:23:16 PM (IST)
