» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
மார்ச் 24, 25-ல் நாடு தழுவிய வேலை நிறுத்தம்: வங்கி ஊழியர்கள் சங்கம் முடிவு!
சனி 8, பிப்ரவரி 2025 10:24:50 AM (IST)
வாரத்துக்கு 5 நாட்கள் வேலை உட்பட பல்வேறு கோரிக்கைகளைவலியுறுத்தி மார்ச் 24, 25ல் நாடு தழுவிய அளவில் 2 நாள் வேலை நிறுத்தம் செய்ய வங்கி ஊழியர் சங்கங்களின் ஐக்கிய மன்றம் முடிவு செய்துள்ளது.
வாரத்துக்கு 5 நாட்கள் வேலை மற்றும் வங்கித்துறையில் அனைத்து நிலைகளிலும் போதுமான பணியாளர்களை நியமித்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வங்கி தொழிற்சங்கங்கள் மார்ச் 24 -ம் தேதி முதல் நாடு தழுவிய இரண்டு நாள் வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளன.
முன்னதாக இந்திய வங்கிகள் சங்கத்தில் நிலுவையில் உள்ள எஞ்சிய பிரச்சினைகளைத் தீர்க்கவும், அரசு ஊழியர்களுக்கான திட்டத்தின்படி, வருமான வரியிலிருந்து விலக்கு அளிப்பதோடு, பணிக்கொடையை ரூ.25 லட்சமாக உயர்த்தவும் வங்கி ஊழியர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி அடுத்த மாதம் 24 மற்றும் 25-ந்தேதிகளில் நாடு தழுவிய அளவில் 2 நாள் வேலை நிறுத்தம் செய்ய வங்கி ஊழியர் சங்கங்களின் ஐக்கிய மன்றம் முடிவு செய்துள்ளது. தங்கள் கோரிக்கை தொடர்பான பேச்சுவார்த்தை மற்றும் விவாதங்களுக்குப்பின் இந்த வேலை நிறுத்த முடிவை எடுத்துள்ளதாக அந்த மன்றம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
வங்கி ஊழியர் சங்கங்களின் ஐக்கிய மன்றத்தில் 9 சங்கங்கள் உறுப்பினர்களாக உள்ளன. அந்தவகையில் அனைத்து இந்திய வங்கி ஊழியர் சங்கம், அனைத்து இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு, வங்கி ஊழியர்களின் தேசிய கூட்டமைப்பு, அனைத்து இந்திய வங்கி அதிகாரிகள் சங்கம், இந்திய வங்கி ஊழியர் கூட்டமைப்பு உள்ளிட்ட முக்கிய சங்கங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு : நாடாளுமன்ற வளாகத்தில் தமிழக எம்.பிக்கள் ஆர்ப்பாட்டம்!
செவ்வாய் 11, மார்ச் 2025 11:34:06 AM (IST)

தி.மு.க. எம்.பி.க்கள் அநாகரீகமானவர்கள் என பேச்சு: மத்திய அமைச்சருக்கு கனிமொழி எம்.பி. கண்டனம்
திங்கள் 10, மார்ச் 2025 8:25:51 PM (IST)

தமிழக மாணவர்களின் எதிர்காலத்தையும் திமுக அரசு பாழடிக்கிறது: தர்மேந்திர பிரதான் குற்றச்சாட்டு
திங்கள் 10, மார்ச் 2025 12:03:41 PM (IST)

தங்ககடத்தல் வழக்கில் கைது: சிறைக்குள் தூங்காமல் தவிக்கும் நடிகை ரன்யாராவ்!
சனி 8, மார்ச் 2025 9:23:16 PM (IST)

அணை கட்ட அனுமதிக்காவிட்டால் கர்நாடகாவில் தமிழ் படங்கள் ஓடாது: வாட்டாள் நாகராஜ் மிரட்டல்
சனி 8, மார்ச் 2025 4:57:02 PM (IST)

சாவர்க்கர் குறித்து கருத்து: ராகுல் காந்திக்கு ரூ. 200 அபராதம் விதித்த லக்னோ நீதிமன்றம்!
வெள்ளி 7, மார்ச் 2025 12:00:10 PM (IST)
