» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
நாடாளுமன்ற மாநிலங்களவையில் காலியாக உள்ள 6 இடங்களுக்கு டிசம்பர் 20-ல் இடைத்தேர்தல்!
செவ்வாய் 26, நவம்பர் 2024 5:31:15 PM (IST)
நாடாளுமன்ற மாநிலங்களவையில் காலியாக உள்ள 6 இடங்களுக்கு வருகிற டிசம்பர் 20-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.
ஆந்திர பிரதேசம், ஒடிசா, மேற்கு வங்கம் மற்றும் அரியானா ஆகிய 4 மாநிலங்களில் காலியாக இருக்கின்ற, நாடாளுமன்ற மாநிலங்களவைக்கான 6 இடங்களுக்கு வருகிற டிசம்பர் 20-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.இவற்றில் ஆந்திர பிரதேசத்தில், வெங்கடரமணா ராவ் மொபிதேவி, பீதா மஸ்தான் ராவ் யாதவ் மற்றும் ரியாகா கிருஷ்ணையா ஆகிய 3 பேரும் கடந்த ஆகஸ்டில் உறுப்பினர் பதவியில் இருந்து விலகினர். இதனால், அந்த 3 இடங்களும் காலியாக உள்ளன. இதில், யாதவ் மற்றும் கிருஷ்ணையா ஆகியோரின் மாநிலங்களவை எம்.பி.க்களுக்கான பதவி காலம் 2028-ம் ஆண்டு ஜூன் 21-ந்தேதியுடன் முடிவடைகிறது. மொபிதேவியின் பதவி காலம் 2026-ம் ஆண்டு ஏப்ரல் 21-ந்தேதி முடிகிறது.
ஒடிசாவில், பிஜு ஜனதா தள கட்சியில் இருந்து சுஜீத் குமார் வெளியேற்றப்பட்டதும் அந்த இடம் காலியாக உள்ளது. அவருடைய பதவி காலம் 2026-ம் ஆண்டு ஏப்ரல் 2-ந்தேதியுடன் முடிவடைகிறது.
இதேபோன்று, மேற்கு வங்கத்தில் பெண் மருத்துவர் ஒருவர் மருத்துவமனையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொடூர படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எந்த நடவடிக்கையும் எடுக்காத சூழலில், அதனை கண்டித்து அக்கட்சியை சேர்ந்த ஜவகர் சர்கார் கடந்த செப்டம்பரில், எம்.பி. பதவியில் இருந்து விலகினார்.
அரியானாவில் பா.ஜ.க.வை சேர்ந்த கிரிஷன் லால் பன்வார், சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றதும் எம்.பி. பதவியில் இருந்து விலகினார். இதனால், அந்த இடம் காலியாக இருக்கின்றது. இந்த சூழலில், காலியாக இருக்கின்ற இந்த 6 மாநிலங்களவை இடங்களுக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.
சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலுக்கு பின்பு, ஆந்திர பிரதேசத்தில் தெலுங்கு தேசம் மற்றும் ஒடிசாவில் பா.ஜ.க. ஆகிய கட்சிகளின் கை ஓங்கியிருக்கிறது. மேற்கு வங்கத்தில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்கிறது. அரியானாவில் பா.ஜ.க. ஆட்சியை தக்க வைத்து உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தெரு நாய் விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல்
சனி 1, நவம்பர் 2025 5:11:53 PM (IST)

ஆந்திராவில் கோவில் ஏகாதசி விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் உயிரிழப்பு: பலர் காயம்
சனி 1, நவம்பர் 2025 3:24:37 PM (IST)

வணிக சிலிண்டரின் விலை ரூ.4.50 குறைப்பு : வீட்டு சிலிண்டர் விலையில் மாற்றமில்லை
சனி 1, நவம்பர் 2025 11:09:11 AM (IST)

உலகின் பழமையான மொழிகளுள் ஒன்று தமிழ் : தேசிய ஒற்றுமை தினத்தில் பிரதமர் பேச்சு!
சனி 1, நவம்பர் 2025 8:43:01 AM (IST)

சித்தூர் மேயர், கணவர் கொலை வழக்கில் 5 பேருக்கு மரண தண்டனை: நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
வெள்ளி 31, அக்டோபர் 2025 5:15:32 PM (IST)

சிறுவர்களை சிறைபிடித்த வெப் சீரிஸ் இயக்குநர் சுட்டுக்கொலை: மும்பையில் பரபரப்பு
வெள்ளி 31, அக்டோபர் 2025 8:15:28 AM (IST)


.gif)