» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
நாடாளுமன்ற மாநிலங்களவையில் காலியாக உள்ள 6 இடங்களுக்கு டிசம்பர் 20-ல் இடைத்தேர்தல்!
செவ்வாய் 26, நவம்பர் 2024 5:31:15 PM (IST)
நாடாளுமன்ற மாநிலங்களவையில் காலியாக உள்ள 6 இடங்களுக்கு வருகிற டிசம்பர் 20-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.
ஆந்திர பிரதேசம், ஒடிசா, மேற்கு வங்கம் மற்றும் அரியானா ஆகிய 4 மாநிலங்களில் காலியாக இருக்கின்ற, நாடாளுமன்ற மாநிலங்களவைக்கான 6 இடங்களுக்கு வருகிற டிசம்பர் 20-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.இவற்றில் ஆந்திர பிரதேசத்தில், வெங்கடரமணா ராவ் மொபிதேவி, பீதா மஸ்தான் ராவ் யாதவ் மற்றும் ரியாகா கிருஷ்ணையா ஆகிய 3 பேரும் கடந்த ஆகஸ்டில் உறுப்பினர் பதவியில் இருந்து விலகினர். இதனால், அந்த 3 இடங்களும் காலியாக உள்ளன. இதில், யாதவ் மற்றும் கிருஷ்ணையா ஆகியோரின் மாநிலங்களவை எம்.பி.க்களுக்கான பதவி காலம் 2028-ம் ஆண்டு ஜூன் 21-ந்தேதியுடன் முடிவடைகிறது. மொபிதேவியின் பதவி காலம் 2026-ம் ஆண்டு ஏப்ரல் 21-ந்தேதி முடிகிறது.
ஒடிசாவில், பிஜு ஜனதா தள கட்சியில் இருந்து சுஜீத் குமார் வெளியேற்றப்பட்டதும் அந்த இடம் காலியாக உள்ளது. அவருடைய பதவி காலம் 2026-ம் ஆண்டு ஏப்ரல் 2-ந்தேதியுடன் முடிவடைகிறது.
இதேபோன்று, மேற்கு வங்கத்தில் பெண் மருத்துவர் ஒருவர் மருத்துவமனையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொடூர படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எந்த நடவடிக்கையும் எடுக்காத சூழலில், அதனை கண்டித்து அக்கட்சியை சேர்ந்த ஜவகர் சர்கார் கடந்த செப்டம்பரில், எம்.பி. பதவியில் இருந்து விலகினார்.
அரியானாவில் பா.ஜ.க.வை சேர்ந்த கிரிஷன் லால் பன்வார், சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றதும் எம்.பி. பதவியில் இருந்து விலகினார். இதனால், அந்த இடம் காலியாக இருக்கின்றது. இந்த சூழலில், காலியாக இருக்கின்ற இந்த 6 மாநிலங்களவை இடங்களுக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.
சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலுக்கு பின்பு, ஆந்திர பிரதேசத்தில் தெலுங்கு தேசம் மற்றும் ஒடிசாவில் பா.ஜ.க. ஆகிய கட்சிகளின் கை ஓங்கியிருக்கிறது. மேற்கு வங்கத்தில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்கிறது. அரியானாவில் பா.ஜ.க. ஆட்சியை தக்க வைத்து உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வரும் கல்வியாண்டு முதல் மும்மொழிக் கொள்கை கட்டாயம்: சி.பி.எஸ்.இ. அதிரடி நடவடிக்கை!
சனி 4, ஏப்ரல் 2026 11:27:52 AM (IST)

மோடி அரசு அமெரிக்கா, இஸ்ரேலுக்குப் பணிந்து போகிறது: பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு!
வெள்ளி 3, ஏப்ரல் 2026 3:45:56 PM (IST)

உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு முருகன் படம் வழங்கி வாழ்த்து பெற்ற தமிழக ஐபிஎஸ் அதிகாரி!
வியாழன் 2, ஏப்ரல் 2026 5:19:20 PM (IST)

வங்கி கணக்கு எண்ணை மாற்றாமல் வங்கி மாறும் வசதி : ரிசர்வ் வங்கி பரிசீலனை!
புதன் 1, ஏப்ரல் 2026 12:53:12 PM (IST)

சர்வதேசப் போர் பதற்றம்: பிரீமியம் பெட்ரோல், டீசல் விலை உயர்வு - வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!
புதன் 1, ஏப்ரல் 2026 12:23:41 PM (IST)

அகில இந்திய பத்திரிகையாளர் சங்கத் தேசிய மாநாடு : தேசிய செயலாளராக டி.எஸ்.ஆர். சுபாஷ் தேர்வு!
செவ்வாய் 31, மார்ச் 2026 8:43:23 PM (IST)

