» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

கோடை வெயிலைத் தவிர்க்க புதிய திட்டம்: ஐபிஎல் கால அட்டவணையை மாற்றுகிறது பிசிசிஐ!

வியாழன் 18, ஜூன் 2026 12:15:59 PM (IST)

இந்தியாவில் நிலவும் கடுமையான கோடை வெயிலின் தாக்கம் மற்றும் மே மாத இறுதியில் தொடங்கும் முன்கூட்டிய பருவமழைப் பொழிவிலிருந்து வீரர்களையும், ரசிகர்களையும் பாதுகாக்கும் வகையில், அடுத்த ஆண்டு (2027) முதல் ஐபிஎல் தொடரை மார்ச் மாதத்தின் மத்தியில் தொடங்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. 

இதுகுறித்து பிசிசிஐ செயலாளர் தேவஜித் சய்கியா அளித்துள்ள பிரத்யேக பேட்டியில், நடப்பு 2026ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரானது மார்ச் 28 முதல் மே 31 வரை நடைபெற்றது. இதில் மே 15ஆம் தேதிக்குப் பிந்தைய போட்டிகளின் போது நாட்டின் பல பகுதிகளில் கடுமையான வெயில் அலையின் தாக்கமும், சில இடங்களில் முன்கூட்டியே பருவமழை தொடங்கும் சூழலும் காணப்பட்டது. இது மைதானத்திற்கு வரும் ரசிகர்களுக்கும், விளையாடும் வீரர்களின் உடல்நிலைக்கும் உகந்ததாக இல்லை. 

இதன் காரணமாக, அடுத்த ஆண்டு முதல் ஐபிஎல் போட்டிகளை இரண்டு வாரங்களுக்கு முன்பாக, அதாவது மார்ச் 10ஆம் தேதியே தொடங்கி, மே 15ஆம் தேதிக்குள் இறுதிப்போட்டியை நடத்தி முடிக்கப் பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. இதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் புதிய விளையாட்டுச் சாளரத்தை (Window) ஆய்வு செய்யப் போட்டி மேம்பாட்டுப் பொது மேலாளருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

சர்வதேச கிரிக்கெட் கால அட்டவணை மற்றும் வெளிநாட்டு வீரர்களின் பங்களிப்பு ஆகியவற்றை நெறிப்படுத்த வேண்டியிருப்பதால், போட்டிகளின் எண்ணிக்கை 74 என்ற அளவிலேயே நீடிக்கும் என்றும், அதனை 94 ஆக உயர்த்தும் திட்டம் தற்போதைக்கு இல்லை என்றும் பிசிசிஐ தரப்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory