» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அன்னை வேளாங்கண்ணி கெபி 44-வது ஆண்டு திருவிழா : தூத்துக்குடியில் கோலாகலத் தொடக்கம்!

சனி 29, ஆகஸ்ட் 2026 9:22:58 PM (IST)

velankannikebi.jpg

தூத்துக்குடி மாநகராட்சி 9-வது வார்டுக்கு உட்பட்ட எஸ்.எஸ். மாணிக்கபுரத்தில் அமைந்துள்ள அன்னை வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா தங்கத்தேர் கெபியின் 44-ஆம் ஆண்டு திருவிழா, இன்று மாலை கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது.

பொதுமக்கள் முன்னிலையில் ஜெபமாலை வழிபாட்டுடன், வண்ணமயமான வானவேடிக்கை முழங்க அன்னை வேளாங்கண்ணி திருக்கொடி ஏற்றப்பட்டது. திருவிழா நாட்களில் தினமும் மாலை வேளையில் சிறப்பு ஜெபமாலை மற்றும் பிரார்த்தனைகள் நடைபெறவுள்ளன. மத நல்லிணக்கத்திற்குச் சான்றாக விளங்கும் இத்திருவிழாவில், அனைத்துச் சமூக மக்களும் ஜாதி மத வேறுபாடின்றி திரளாகக் கலந்துகொள்கின்றனர்.

திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளாக வரும் செப்டம்பர் 6-ஆம் தேதி சப்பர பவனியும், செப்டம்பர் 7-ஆம் தேதி சமபந்தி ஆசன விருந்தும் நடைபெறவுள்ளன. 

சிகர நிகழ்ச்சியான ஆடம்பர திருவிழா கூட்டுத் திருப்பலி, வரும் செப்டம்பர் 8-ஆம் தேதி லூர்தம்மாள்புரம் லூர்து அன்னை ஆலயப் பங்குத்தந்தை செல்வன் பெர்னான்டோ தலைமையில் சிறப்பாக நடைபெறவுள்ளது. விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தங்கத்தேர் கெபி கமிட்டி, வேளாங்கண்ணி மாதா அன்பியம் மற்றும் பூண்டி மாதா அன்பிய மக்கள் இணைந்து சிறப்பாகச் செய்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory