» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
அன்னை வேளாங்கண்ணி கெபி 44-வது ஆண்டு திருவிழா : தூத்துக்குடியில் கோலாகலத் தொடக்கம்!
சனி 29, ஆகஸ்ட் 2026 9:22:58 PM (IST)

தூத்துக்குடி மாநகராட்சி 9-வது வார்டுக்கு உட்பட்ட எஸ்.எஸ். மாணிக்கபுரத்தில் அமைந்துள்ள அன்னை வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா தங்கத்தேர் கெபியின் 44-ஆம் ஆண்டு திருவிழா, இன்று மாலை கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது.
பொதுமக்கள் முன்னிலையில் ஜெபமாலை வழிபாட்டுடன், வண்ணமயமான வானவேடிக்கை முழங்க அன்னை வேளாங்கண்ணி திருக்கொடி ஏற்றப்பட்டது. திருவிழா நாட்களில் தினமும் மாலை வேளையில் சிறப்பு ஜெபமாலை மற்றும் பிரார்த்தனைகள் நடைபெறவுள்ளன. மத நல்லிணக்கத்திற்குச் சான்றாக விளங்கும் இத்திருவிழாவில், அனைத்துச் சமூக மக்களும் ஜாதி மத வேறுபாடின்றி திரளாகக் கலந்துகொள்கின்றனர்.
திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளாக வரும் செப்டம்பர் 6-ஆம் தேதி சப்பர பவனியும், செப்டம்பர் 7-ஆம் தேதி சமபந்தி ஆசன விருந்தும் நடைபெறவுள்ளன.
சிகர நிகழ்ச்சியான ஆடம்பர திருவிழா கூட்டுத் திருப்பலி, வரும் செப்டம்பர் 8-ஆம் தேதி லூர்தம்மாள்புரம் லூர்து அன்னை ஆலயப் பங்குத்தந்தை செல்வன் பெர்னான்டோ தலைமையில் சிறப்பாக நடைபெறவுள்ளது. விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தங்கத்தேர் கெபி கமிட்டி, வேளாங்கண்ணி மாதா அன்பியம் மற்றும் பூண்டி மாதா அன்பிய மக்கள் இணைந்து சிறப்பாகச் செய்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைத்தீர்க்கும் நாள் : நலதிட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்!
சனி 29, ஆகஸ்ட் 2026 5:43:26 PM (IST)

மூதாட்டியைக் கட்டிப்போட்டு 44 கிராம் நகை பறிப்பு : பக்கத்து வீட்டுப் பெண் உட்பட 2 பேர் கைது!
சனி 29, ஆகஸ்ட் 2026 5:14:03 PM (IST)

பெண்ணைக் கொன்று வேக வைத்த கொடூர தம்பதி கைது: விசாரணையில் பகீர் தகவல்கள்!
சனி 29, ஆகஸ்ட் 2026 4:39:35 PM (IST)

விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துக: தமிழக அரசுக்கு தேமுதிக வலியுறுத்தல்!
சனி 29, ஆகஸ்ட் 2026 10:50:02 AM (IST)

அஞ்சல்துறையில் 2,095 பணியிடங்கள்: பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
சனி 29, ஆகஸ்ட் 2026 10:34:39 AM (IST)

கல்லிடைக்குறிச்சியில் நபிகள் நாயகம் பிறந்த நாள், மதரஸா ஆண்டு விழா உள்ளிட்ட முப்பெரும் விழா!
சனி 29, ஆகஸ்ட் 2026 10:11:24 AM (IST)


