» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அஞ்சல்துறையில் 2,095 பணியிடங்கள்: பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

சனி 29, ஆகஸ்ட் 2026 10:34:39 AM (IST)

இந்திய அஞ்சல் துறையின் தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் 2,095 பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 31.08.2026 முதல் 19.09.2026 வரை இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

பணி நிறுவனம்: தமிழ்நாடு அஞ்சல் துறை

காலியிடங்கள்: 2,095

பதவியின் பெயர்: கிராமின் தாக் சேவக் (GDS)

கல்வித்தகுதி: 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பத்தாம் வகுப்பு வரை உள்ளூர் மொழியைப் (தமிழ்) படித்திருப்பதுடன், கணினி அறிவு மற்றும் சைக்கிள் ஓட்டும் திறனும் அவசியம்.

வயது வரம்பு: 21.09.2026 அன்றைய நிலவரப்படி 18 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். (அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு).

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு எதுவும் கிடையாது. பத்தாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் (Merit List) தகுதிப் பட்டியல் தயாரிக்கப்பட்டு, சான்றிதழ் சரிபார்ப்பிற்குப் பின் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 31.08.2026 முதல் 19.09.2026 வரை இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களில் திருத்தங்கள் செய்ய 23.09.2026 மற்றும் 24.09.2026 ஆகிய தேதிகளில் அவகாசம் வழங்கப்படும்.

கூடுதல் விவரங்கள் மற்றும் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க https://indiapost.gov.in/gdsonlineengagement என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடலாம்.


மக்கள் கருத்து

J. Esakki rajaAug 29, 2026 - 10:48:26 AM | Posted IP 104.2*****

Yes

J. Esakki rajaAug 29, 2026 - 10:48:02 AM | Posted IP 104.2*****

Yes

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory