» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கோவில்பட்டி நகராட்சி ஆணையர் மாற்றம் : நகராட்சி நிர்வாக இயக்குநர் உத்தரவு!

வியாழன் 27, ஆகஸ்ட் 2026 12:36:48 PM (IST)

MunicipalKvp.jpg

கோவில்பட்டி நகராட்சியின் (பொறுப்பு) ஆணையர் ஜஹாங்கீர் பாஷா மாற்றப்பட்டு, புதிய பொறுப்பு ஆணையராக வீரமுத்துகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். 

கோவில்பட்டி நகராட்சி ஆணையருக்கான முழு கூடுதல் பொறுப்பில் மாற்றம் செய்து நகராட்சி நிர்வாக இயக்குநர் மதுசூதன் ரெட்டி, உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தூத்துக்குடி மாநகராட்சி உதவி ஆணையர் அ. ஜஹாங்கீர் பாஷா கோவில்பட்டி நகராட்சி ஆணையராக முழு கூடுதல் பொறுப்பு வகிக்க நியமித்து கடந்த 14.07.2026 அன்று பிறப்பிக்கப்பட்ட உத்தரவு நிர்வாக நலன் கருதி தற்போது ரத்து செய்யப்படுகிறது.

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி உதவி ஆணையர் ஏ. வீரமுத்துகுமார் மறு உத்தரவு வரும் வரை கோவில்பட்டி நகராட்சி ஆணையராக முழு கூடுதல் பொறுப்பு வகிக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

நியமிக்கப்பட்டுள்ள உதவி ஆணையர் உடனடியாகக் கோவில்பட்டி நகராட்சியில் பொறுப்பேற்று, அதற்கான அறிக்கையை உடனடியாக அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory