» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சட்டப்பேரவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவைப் பேச அனுமதிக்கக் கூடாது: பிரேமலதா விஜயகாந்த் பேச்சு!

வியாழன் 27, ஆகஸ்ட் 2026 5:53:04 PM (IST)

AAdhavPremalatha.jpg

சட்டப்பேரவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசத் தொடங்கிய பிறகே வாக்குவாதமும் சலசலப்பும் ஏற்படுவதாக தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் இன்று பேசிய அவர், "மக்களின் பிரச்சினைகளை விவாதிப்பதற்காகத்தான் சட்டப்பேரவை நடைபெறுகிறது. ஆனால் கடந்த 3, 4 நாட்களாகப் பேரவையில் தொடர்ந்து வாக்குவாதம் நடைபெற்று வருகிறது. ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை முன்வைப்பதால் பேரவை நிகழ்வுகள் நீண்ட நேரம் நடைபெறுகின்றன. இதனால் தமிழக மக்களுக்கு என்ன பயன்?" என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், "உறுப்பினர்கள் தேர்வுக்குத் தயாராவதைப் போல் பேரவையில் பேசுவதற்குத் தயாராகி வருகின்றனர். ஆனால் மக்களின் பிரச்சினைகள் குறித்துச் சுமார் ஒரு மணி நேரம் மட்டுமே பேசப்படுகிறது. மீதமுள்ள நேரம் முழுவதும் வாக்குவாதமாகவே செல்கிறது. எனவே, அனைவருக்கும் பேரவையில் பேசுவதற்கு உரிய வாய்ப்பு வழங்க வேண்டும்" என்றார்.

தொடர்ந்து பேசிய பிரேமலதா, "அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசாத வரை சட்டப்பேரவை அமைதியாகச் செல்கிறது. அவர் பேசத் தொடங்கியவுடன் பிரச்சினை ஏற்படுகிறது. இது சட்டமன்றம்; சண்டை மன்றம் அல்ல. எனவே அவரைப் பேச அனுமதிக்கக் கூடாது" என்று தெரிவித்தார்.

மேலும், தற்போதைய அரசுக்கு மக்கள் நலனுக்காகச் செயல்பட வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும், மக்களுக்காகத் தங்களால் முடிந்த பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.


மக்கள் கருத்து

இதுAug 27, 2026 - 07:22:07 PM | Posted IP 162.1*****

இந்த பொம்பிளை திமுக கைக்கூலி

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory