» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
சாலை விபத்தில் பலியான ஆசிரியை குடும்பத்திற்கு ரூ. 27 லட்சம் இழப்பீடு: தீர்ப்பாயம் உத்தரவு!
வியாழன் 20, ஆகஸ்ட் 2026 5:11:16 PM (IST)
சாலை விபத்தில் உயிரிழந்த ஆசிரியை குடும்பத்திற்கு ரூ. 27 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று நெல்லை மோட்டார் விபத்து இழப்பீட்டு தீர்ப்பாயம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் சோக்கம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியையாகப் பணியாற்றி வந்தவர் விஜயமாலினி (45). கடந்த 20.10.2021 அன்று தூத்துக்குடி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் காரியனேந்தல் பாலம் அருகே நடைபெற்ற கோர சாலை விபத்தில் இவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
ஆசிரியை விஜயமாலினியின் உயிரிழப்பைத் தொடர்ந்து, அவரது கணவர் தாமோதரன், மகள் ரிஷிப்ரியா மற்றும் மகன் மோனிக் பிரசன்னா ஆகியோர் உரிய இழப்பீடு கோரி வழக்கறிஞர் செல்வராஜ் மூலமாக மோட்டார் விபத்து இழப்பீட்டு தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
இவ்வழக்கை நெல்லை மோட்டார் விபத்து இழப்பீட்டு தீர்ப்பாய நீதிபதி செல்வம் தீவிரமாக விசாரித்தார். வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, உயிரிழந்த ஆசிரியை விஜயமாலினியின் குடும்பத்தினருக்கு மொத்தம் ரூ. 27 லட்சம் இழப்பீட்டுத் தொகையாக வழங்கிட உத்தரவிட்டார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

எம்.எல்.ஏ.க்களுக்கு கார் வழங்கும் திட்டம் தேவை தானா?” - தவெக அரசுக்கு சீமான் கடும் கண்டனம்!
வியாழன் 20, ஆகஸ்ட் 2026 4:58:37 PM (IST)

காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்பை மதிக்க வேண்டும்: முதல்வர் விஜய் வலியுறுத்தல்!
வியாழன் 20, ஆகஸ்ட் 2026 4:49:37 PM (IST)

காட்டுப் பன்றிகளைப் பிடிக்கக் கூண்டுகள் தயார் செய்ய ஆட்சியர் விஷு மகாஜன் உத்தரவு!
வியாழன் 20, ஆகஸ்ட் 2026 4:21:52 PM (IST)

சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்த மதபோதகருக்கு மரண தண்டனை!: போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
வியாழன் 20, ஆகஸ்ட் 2026 12:53:39 PM (IST)

நெல்லை அருகே காகித ஆலையில் பயங்கர தீ விபத்து: 25,000 டன் காகிதங்கள் எரிந்து நாசம்!
வியாழன் 20, ஆகஸ்ட் 2026 12:17:22 PM (IST)

கோவில்பட்டி வட்டத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியர் விஷு மகாஜன் ஆய்வு!
வியாழன் 20, ஆகஸ்ட் 2026 12:02:34 PM (IST)


