» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

வீட்டில் புதையல் இருப்பதாகக் கூறி மாந்திரீக பூஜை: பெண்ணிடம் ரூ.1.54 லட்சம் மோசடி செய்த 2 பேர் கைது!

வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 8:44:23 AM (IST)

தென்காசியில் வீட்டில் புதையல் இருப்பதாகக் கூறி மாந்திரீக பூஜை செய்து, பெண்ணிடம் ரூ.1.54 லட்சம் மோசடியில் ஈடுபட்ட போலி மாந்திரீகவாதிகள் 2 பேரை காவல் துறையினர் அதிரடியாகக் கைது செய்தனர்.

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள கே.டி.சி. நகர் பகுதியைச் சேர்ந்த வேல்முருகன் (54) மற்றும் ஆய்க்குடி அருகே உள்ள விந்தன்கோட்டை தெற்கு தெருவைச் சேர்ந்த குமார் (47) ஆகிய இருவரும் நண்பர்கள். தங்களுக்கு மாந்திரீகம் தெரியும் எனக் கூறி இவர்கள் பல்வேறு ஊர்களுக்குச் சென்று வந்துள்ளனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு தென்காசி பகுதிக்குச் சென்ற இவர்கள், அங்கு வீட்டில் தனியாக இருந்த ஒரு பெண்ணிடம், "உங்கள் வீட்டில் விலைமதிப்பற்ற புதையல் மற்றும் பொருட்கள் உள்ளன. சிறப்பு மாந்திரீக பூஜை மற்றும் பரிகாரங்கள் செய்தால் அவை கிடைக்கும்" என ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.

இவர்களின் பேச்சை உண்மை என நம்பிய அந்தப் பெண், 'கூகுள் பே' மற்றும் ரொக்கமாக எனச் சுமார் ரூ.1.54 லட்சத்தை அவர்களிடம் கொடுத்துள்ளார். பணத்தைப் பெற்றுக் கொண்ட இருவரும் அப்பெண்ணின் வீட்டில் பல மாந்திரீக பூஜைகளைச் செய்துள்ளனர்.

ஆனால், நீண்ட நாட்களாகியும் புதையல் கிடைக்காததால் சந்தேகமடைந்த அப்பெண், இதுகுறித்து அவர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு அவர்கள், "பூஜைகள் நடைபெற்று வருகின்றன; இதை பாதியில் நிறுத்தினால் உங்கள் குடும்பத்தில் யாரேனும் ஒருவரின் உயிருக்கு ஆபத்து ஏற்படும்" என மிரட்டியுள்ளனர்.

தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அப்பெண், தனது குடும்பத்தினரிடம் விவரத்தைக் கூறித் தென்காசி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த தென்காசி போலீசார், வேல்முருகன் மற்றும் குமார் ஆகிய இருவரையும் நேற்று அதிரடியாகக் கைது செய்தனர். இந்த மோசடியில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்துப் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீட்டில் புதையல் இருப்பதாகக் கூறி மாந்திரீக பூஜை செய்து பெண்ணிடம் பண மோசடியில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory