» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தனியார் மருத்துவமனையில் பெண் ஊழியருக்கு வெட்டு: வாலிபர் தற்கொலை முயற்சி!

சனி 18, ஜூலை 2026 8:39:59 AM (IST)

நாசரேத் பகுதியில் தனியார் மருத்துவமனைக்குள் புகுந்து பெண் ஊழியரை அரிவாளால் வெட்டிவிட்டு, வாலிபர் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்துக் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே உள்ள தேமாங்குளம் கோவில் தெருவைச் சேர்ந்த சாமுவேல் மகன் நாராயணன் (28). கூலி தொழிலாளியான இவரும், நாசரேத் தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவரும் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இவர்களின் காதலுக்குப் பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து, அப் பெண் நாராயணனுடன் பேசுவதைத் தவிர்த்து வந்துள்ளார்.

பணிக்குச் சென்ற அப் பெண்ணிடம் நாராயணன் மீண்டும் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். அதற்கு அவர் மறுக்கவே, ஆத்திரமடைந்த நாராயணன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அப் பெண்ணின் கைகள் மற்றும் கழுத்துப் பகுதியில் வெட்டியுள்ளார். பின்னர் நாராயணன் தனக்குத் தானே அரிவாளால் வெட்டிக்கொண்டு தற்கொலைக்கும் முயன்றுள்ளார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற நாசரேத் காவல் துறையினர், காயமடைந்த பெண்ணை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்குத் தீவிர சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். காயமடைந்த நாராயணன் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் காவல் துறைப் பாதுகாப்புடன் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து நாசரேத் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory