» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழக வட்டாட்சியர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை: ரூ.82 லட்சம் பறிமுதல்

சனி 18, ஜூலை 2026 10:42:22 AM (IST)

currency22Taluk.jpg

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள வட்டாட்சியர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் மேற்கொண்ட சோதனையில், கணக்கில் காட்டப்படாத 82 லட்ச ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பட்டா மாறுதல், வருமானம், இருப்பிடம் மற்றும் சாதிச் சான்றிதழ்கள் உள்ளிட்ட அரசு சேவைகளை வழங்குவதற்காகச் சில வட்டாட்சியர் அலுவலகங்களில் லஞ்சம் பெறப்படுவதாகப் பொதுமக்களிடமிருந்து தொடர்ந்து புகார்கள் பெறப்பட்டன. இதன் அடிப்படையில் மாநிலம் முழுவதும் ஒரே நேரத்தில் பல்வேறு வட்டாட்சியர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

மாநிலம் முழுவதும் மொத்தம் 41 இடங்களில் இச்சோதனை நடத்தப்பட்டது. இதில் 35 தாலுகா அலுவலகங்களில் கணக்கில் காட்டப்படாத ரொக்கப் பணம் கண்டறியப்பட்டது. சோதனையின் முடிவில், கணக்கில் காட்டப்படாத ரொக்கமாக ரூ.13 லட்சமும், ஆன்லைன் பரிவர்த்தனைகள் மூலம் பெறப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் ரூ.68 லட்சமும் என மொத்தம் ரூ.82 லட்சம் லஞ்ச ஒழிப்புத் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மாநில அளவில் கரூர் தாலுகா அலுவலகத்தில் அதிகபட்சமாக ரொக்கம் ரூ.1,18,130 மற்றும் கூகுள்பே வழியாக ரூ.16,33,654 கண்டறியப்பட்டுள்ளது. தூத்துக்குடி தாலுகா அலுவலகத்தில் கணக்கில் காட்டப்படாத ரொக்கம் ரூ.22,970 கைப்பற்றப்பட்டுள்ளது. 

மேலும், நெல்லை சரகத்திற்குட்பட்ட திசையன்விளையில் ரூ.32,200, தென்காசியில் ரூ.15,000, கூகுள்பே ரூ.1,68,200 மற்றும் கன்னியாகுமரி அகஸ்தீஸ்வரத்தில் ரூ.1,50,000 மற்றும் சென்னை எழும்பூர், சோழிங்கநல்லூர், மாம்பலம், பெரம்பூர் ஆகிய தாலுகா அலுவலகங்களிலும் முறைகேட்டுப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

இப்பணத்துடன் முக்கிய ஆவணங்கள் மற்றும் நிதிப் பரிவர்த்தனை தொடர்பான பதிவுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. இவற்றின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory