» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
நெல்லையப்பர் கோவில் ஆடிப் பூரத் திருவிழா: காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு வைபவம்!
திங்கள் 13, ஜூலை 2026 8:44:13 AM (IST)

நெல்லை டவுன் நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோவில் ஆடிப் பூரத் திருவிழாவை முன்னிட்டு, காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
நெல்லையப்பர் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் முக்கியத் திருவிழாக்களில் ஒன்றான ஆடிப் பூரத் திருவிழா, கடந்த 9 ஆம் தேதி அம்மன் சன்னதி கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் இத் திருவிழா நாட்களில் சுவாமி மற்றும் அம்பாளுக்குச் சிறப்பு வழிபாடுகளும், இரவு நேரங்களில் பல்வேறு வாகனங்களில் வீதி உலாவும் நடைபெற்று வருகின்றன.
திருவிழாவின் 4 ஆம் திருநாளை முன்னிட்டு, காலையில் அம்பாளுக்குச் சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து அம்பாள் சன்னதி ஊஞ்சல் மண்டபத்தில் காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. குழந்தை பாக்கியம் வேண்டிப் ஏராளமான பக்தர்கள் அம்மனுக்கு வளையல்களைக் காணிக்கையாக வழங்கி வழிபாட்டில் பங்கேற்றனர்.
வளைகாப்பு நிகழ்ச்சியின் நிறைவாகச் சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெற்றது. வழிபாட்டில் பங்கேற்ற பெண்களுக்கு மஞ்சள், குங்குமம் மற்றும் வளையல் உள்ளிட்ட மங்களப் பொருட்கள் பிரசாதமாக வழங்கப்பட்டன.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உலக மக்கள் தொகை தினம் விழிப்புணர்வு பேரணி: ஆட்சியர் ஆனந்த் மோகன் துவக்கி வைத்தார்!
திங்கள் 13, ஜூலை 2026 12:43:35 PM (IST)

2031-ல் தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்போம்: பொள்ளாச்சி மாநாட்டில் அண்ணாமலை உறுதி!
திங்கள் 13, ஜூலை 2026 11:53:56 AM (IST)

மாநகராட்சி ஒப்பந்தப் பணியில் அலட்சியம் : ராட்சத குழாய் விழுந்து சிறுவன் பலி; தந்தை காயம்!
திங்கள் 13, ஜூலை 2026 11:18:19 AM (IST)

எழுத்தாளர் பூமணி மறைவு தமிழ் சமூகத்திற்குப் பேரிழப்பு: இயக்குநர் மாரி செல்வராஜ் இரங்கல்
திங்கள் 13, ஜூலை 2026 11:06:57 AM (IST)

பூமணி மறைவு தமிழ் இலக்கிய உலகிற்குப் பேரிழப்பு : கனிமொழி எம்.பி. இரங்கல்!
திங்கள் 13, ஜூலை 2026 10:51:31 AM (IST)

எழுத்தாளர் பூமணி மறைவு: அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு - முதல்வர் விஜய் அறிவிப்பு!
திங்கள் 13, ஜூலை 2026 10:29:32 AM (IST)


