» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பெண்ணிடம் 3.5 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!
புதன் 8, ஜூலை 2026 8:30:01 AM (IST)
கோவில்பட்டியில் செல்போனில் பேசிக் கொண்டிருந்த பெண்ணிடம் 3.5 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற மர்ம நபர்களைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி ராஜீவ் நகர் ஈபி காலனி பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சேவியர் மனைவி அனிதா (45). அனிதா கடந்த திங்கள்கிழமை அப்பகுதியில் உள்ள காசி அம்மன் கோயில் அருகே தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு கைப்பேசியில் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த அடையாளம் தெரியாத இரு மர்ம நபர்கள், அனிதா எதிர்பாராத நேரத்தில் அவர் கழுத்தில் அணிந்திருந்த சுமார் 3.5 பவுன் எடையுள்ள தங்கச் சங்கிலியைத் திடீரெனப் பறித்துக் கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பியோடினர்.
இதுகுறித்து அனிதா அளித்த புகாரின் பேரில் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் முறைப்படி வழக்குப் பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து தப்பியோடிய மர்ம நபர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குதிரை பேரம் விவகாரம்: செந்தில் பாலாஜி முன் ஜாமீன் மனு விசாரணை பிற்பகலுக்கு ஒத்திவைப்பு!
புதன் 8, ஜூலை 2026 12:55:44 PM (IST)

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் 839 பணியிடங்கள் : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
புதன் 8, ஜூலை 2026 12:11:31 PM (IST)

வாகன ஓட்டிகளை அலறவிடும் புதிய தானியங்கி டிரைவிங் டெஸ்ட்... 28 பேரில் ஒருவர் மட்டுமே பாஸ்!
புதன் 8, ஜூலை 2026 10:36:02 AM (IST)

நூறு நாள் வேலைத் திட்டத்தை முறையாக வழங்கக் கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை!
செவ்வாய் 7, ஜூலை 2026 7:41:26 PM (IST)
_1783425832.jpg)
அரசுப் பள்ளிகளில் குழந்தைகளிடம் அமைச்சர் கீர்த்தனா அத்துமீறல்: சீமான் கண்டனம்!
செவ்வாய் 7, ஜூலை 2026 5:34:25 PM (IST)

திருவேங்கடம் அருகே 2,500 ஆண்டுகள் பழமையான சதுர வடிவ செங்கல் படிக்கிணறு கண்டுபிடிப்பு!
செவ்வாய் 7, ஜூலை 2026 3:55:45 PM (IST)


