» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நூறு நாள் வேலைத் திட்டத்தை முறையாக வழங்கக் கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை!

செவ்வாய் 7, ஜூலை 2026 7:41:26 PM (IST)

100daysvilathi.jpg

விளாத்திகுளம் அருகே நூறு நாள் வேலைத்திட்டத்தை முறையாக வழங்கக்கோரி 6 கிராம மக்கள் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மந்திக்குளம் ஊராட்சியில் 100 நாள் வேலைத்திட்டத்தை முறையாக வழங்க வலியுறுத்தி, ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை 6 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் முற்றுகையிட்டு அதிரடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மந்திக்குளம் ஊராட்சியில் செயல்படுத்தப்பட்டு வரும் 100 நாட்கள் வேலைத் திட்டத்தின் கீழ் மந்திக்குளம், ஓ.லட்சுமிநாராயணபுரம், லெக்கம்பட்டி, இலந்தைக்குளம், மீனாட்சிபுரம், கோட்டநத்தம் ஆகிய 6 கிராமங்களைச் சேர்ந்த 650-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயனடைந்து வருகின்றனர். தற்போது இப்பொதுமக்கள் 2 கூட்டமைப்பாகப் பிரிக்கப்பட்டு வேலை வழங்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, அனைத்து வேலை அட்டைதாரர்களுக்கும் முழுமையாக 100 நாட்கள் பணி கிடைக்காமல், வருடத்திற்கு 50-க்கும் குறைவான நாட்களே பணி வழங்கும் அவல நிலை நீடித்து வருகிறது.

இந்த நடைமுறையை உடனடியாக முறைப்படுத்தி, வேலை அட்டை வைத்துள்ள குடும்பங்கள் அனைத்திற்கும் தங்குதடையின்றி முழுமையாக 100 நாட்கள் பணி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திப் பொதுமக்கள் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டுத் தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். தொடர்ந்து, கோரிக்கைகள் அடங்கிய மனுவை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் நேரில் அளித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory