» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகத்தில் ரூ.1000 கோடி முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் ஹிட்டாச்சி நிறுவனம் ஒப்பந்தம்!

செவ்வாய் 7, ஜூலை 2026 3:40:24 PM (IST)

HitachiCmVijay.jpg

தமிழகத்தில் ரூ.1000 கோடி முதலீட்டில் 1000 நபர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகளை அளிக்கும் வகையில், உலகப் புகழ்பெற்ற ஹிட்டாச்சி நிறுவனத்திற்கும், தமிழக அரசுக்கும் இடையே இன்று தலைமைச் செயலகத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இது குறித்துத் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 1000 கோடி ரூபாய் முதலீட்டில் 1000 நபர்களுக்கு உயர்தர தொழில்நுட்ப வேலைவாய்ப்பு அளிக்கும் நோக்கில் இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, சென்னை போரூரில் உள்ள 'ஹிட்டாச்சி எனர்ஜி டெக்னாலஜி சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட்' நிறுவனத்தின் உலகளாவிய தொழில்நுட்பச் சேவை விரிவாக்கத் திட்டம் மற்றும் செங்கல்பட்டில் உள்ள 'ஹிட்டாச்சி எனர்ஜி இந்தியா' நிறுவனத்தின் உற்பத்தி விரிவாக்கத் திட்டம் ஆகிய இரு முக்கியத் திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலமைச்சர் விஜய் முன்னிலையில் இன்று மேற்கொள்ளப்பட்டது. இத்திட்டங்களின் மூலம் 1000 உயர்தர தொழில்நுட்ப வல்லுநர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகள் நேரடியாக அளிக்கப்படும்.

சென்னை தலைமைச் செயலகத்தில் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம் கையெழுத்தாகும் போது, தமிழக தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா, தலைமைச் செயலாளர் சாய்குமார், ஹிட்டாச்சி இந்தியா நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் வேணு நுகரி, ஹிட்டாச்சி இந்தியா நிறுவனத்தின் தலைமை வளர்ச்சி அலுவலர் கார்த்திக் கிருஷ்ணமூர்த்தி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory