» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு தனி விளையாட்டு அரங்கம்: ஆட்சியரிடம் கோரிக்கை மனு!

திங்கள் 6, ஜூலை 2026 3:30:41 PM (IST)



தூத்துக்குடி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் சிறப்பாகப் பயிற்சி பெறத் தனி உள்விளையாட்டு அரங்கம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

தூத்துக்குடி மாவட்ட மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் சிறப்பாகப் பயிற்சி பெறத் தனி உள்விளையாட்டு அரங்கம் மற்றும் பிரத்யேக வசதிகள் செய்து தரக் கோரி, தூத்துக்குடி சிறப்புத் திறனாளிகளின் பாரா விளையாட்டுச் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

அம்மனுவில், தடகளம், அமர்வு கைப்பந்து, பளுதூக்குதல் உள்ளிட்ட போட்டிகளில் மாவட்ட வீரர்கள் தேசிய அளவில் சாதித்து வருவதால், அவர்களுக்கெனத் தனி உள்விளையாட்டு அரங்கம், உடற்பயிற்சிக் கூடம் மற்றும் பிரத்யேக ஆடுகளங்களை அமைக்க வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.

மேலும், விவசாயிகள் மற்றும் மீனவர்களைப் போல மாற்றுத்திறனாளிகளுக்கும் தனியாகக் குறைதீர்ப்பு நாள் கூட்டம் நடத்த வேண்டும் என்றும், முதலமைச்சர் கோப்பை போட்டிகளில் 'அமர்வு கைப்பந்து' விளையாட்டை இணைக்க விளையாட்டுத் துறை (SDAT) அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் பரிந்துரைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory