» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கத்தார் எரிவாயு ஆலை வெடிவிபத்து: நெல்லை மாவட்ட வாலிபர்கள் 3 பேர் பரிதாப பலி!

புதன் 24, ஜூன் 2026 7:31:35 AM (IST)



கத்தார் நாட்டில் உள்ள இயற்கை எரிவாயு உற்பத்தி ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த இளம் தொழிலாளர்கள் 3 பேர் உட்பட மொத்தம் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

கத்தார் நாட்டின் ராஸ் லப்பான் இயற்கை எரிவாயு தொழிற்பேட்டையில் அமைந்துள்ள ‘பர்சான்' ஆலை, ஈரான் - அமெரிக்கா போர் காரணமாகக் கடந்த 4 மாதங்களாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது அமைதி ஒப்பந்தம் உருவாகும் சூழலில், ஆலையை மீண்டும் இயக்குவதற்கான ஆரம்பகட்ட வேலைகள் நடைபெற்ற போது எதிர்பாராதவிதமாகப் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டுத் தீ பரவியது. இந்த கோர விபத்தில் இந்தியர்கள் உட்பட 13 பேர் பலியாகினர், 60-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

இவ்விபத்தில் பலியானவர்களில் 3 பேர் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த வாலிபர்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது:

பபித் (26): ராதாபுரம் தாலுகா பழவூர் அருகே உள்ள சிதம்பராபுரத்தைச் சேர்ந்த தங்கராஜா மகன்.

சுவின் (24): பணகுடி அழகியநம்பியாபுரத்தைச் சேர்ந்த மைக்கேல் மகன்.

சஜித்குமார் (25): பணகுடி சிவகாமிபுரத்தைச் சேர்ந்த முத்துராஜா மகன்.

உடல்களைக் கொண்டு வரக் கோரிக்கை:

கடந்த ஜூன் 20 அன்று குடும்பத்தினருடன் போனில் பேசிய சஜித்குமார், ஜூன் 21 அன்று நடைபெற்ற விபத்தில் சிக்கி உயிரிழந்ததாக வந்த தகவல் பெற்றோரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. உயிரிழந்த 3 பேரின் உடல்களையும் கத்தாரிலிருந்து விரைந்து சொந்த ஊருக்குக் கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் இந்திய தூதரகத்தின் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதற்கிடையே, நெல்லை தொகுதி எம்பி ராபர்ட் புரூஸ் மத்திய அரசுக்கும் இந்திய தூதரகத்திற்கும் அனுப்பியுள்ள மனுவில், விபத்தில் பலியான பபித், சுவின், சஜித்குமார் ஆகியோரின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கவும், உடல்களை விரைவாகத் தாயகம் கொண்டு வரவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory