» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கத்தார் எரிவாயு ஆலை வெடிவிபத்து: நெல்லை மாவட்ட வாலிபர்கள் 3 பேர் பரிதாப பலி!
புதன் 24, ஜூன் 2026 7:31:35 AM (IST)

கத்தார் நாட்டில் உள்ள இயற்கை எரிவாயு உற்பத்தி ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த இளம் தொழிலாளர்கள் 3 பேர் உட்பட மொத்தம் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
கத்தார் நாட்டின் ராஸ் லப்பான் இயற்கை எரிவாயு தொழிற்பேட்டையில் அமைந்துள்ள ‘பர்சான்' ஆலை, ஈரான் - அமெரிக்கா போர் காரணமாகக் கடந்த 4 மாதங்களாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது அமைதி ஒப்பந்தம் உருவாகும் சூழலில், ஆலையை மீண்டும் இயக்குவதற்கான ஆரம்பகட்ட வேலைகள் நடைபெற்ற போது எதிர்பாராதவிதமாகப் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டுத் தீ பரவியது. இந்த கோர விபத்தில் இந்தியர்கள் உட்பட 13 பேர் பலியாகினர், 60-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இவ்விபத்தில் பலியானவர்களில் 3 பேர் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த வாலிபர்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது:
பபித் (26): ராதாபுரம் தாலுகா பழவூர் அருகே உள்ள சிதம்பராபுரத்தைச் சேர்ந்த தங்கராஜா மகன்.
சுவின் (24): பணகுடி அழகியநம்பியாபுரத்தைச் சேர்ந்த மைக்கேல் மகன்.
சஜித்குமார் (25): பணகுடி சிவகாமிபுரத்தைச் சேர்ந்த முத்துராஜா மகன்.
உடல்களைக் கொண்டு வரக் கோரிக்கை:
கடந்த ஜூன் 20 அன்று குடும்பத்தினருடன் போனில் பேசிய சஜித்குமார், ஜூன் 21 அன்று நடைபெற்ற விபத்தில் சிக்கி உயிரிழந்ததாக வந்த தகவல் பெற்றோரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. உயிரிழந்த 3 பேரின் உடல்களையும் கத்தாரிலிருந்து விரைந்து சொந்த ஊருக்குக் கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் இந்திய தூதரகத்தின் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதற்கிடையே, நெல்லை தொகுதி எம்பி ராபர்ட் புரூஸ் மத்திய அரசுக்கும் இந்திய தூதரகத்திற்கும் அனுப்பியுள்ள மனுவில், விபத்தில் பலியான பபித், சுவின், சஜித்குமார் ஆகியோரின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கவும், உடல்களை விரைவாகத் தாயகம் கொண்டு வரவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நம்மைப் பிடிக்காதவர்களுக்கு நாம் எது செய்தாலும் பிடிக்காது: நடிகர் ரஜினிகாந்த் பேச்சு!
புதன் 24, ஜூன் 2026 4:04:08 PM (IST)

பாமக உட்கட்சிப் பூசலுக்கு முற்றுப்புள்ளி? தைலாபுரம் இல்லத்தில் ராமதாஸை சந்தித்த அன்புமணி!
புதன் 24, ஜூன் 2026 3:52:20 PM (IST)

ஜூலை 1 முதல் புதிய ஊரக வளர்ச்சித் திட்டம் அமல் : பயிற்றுநர்களுக்கான 2 நாள் பயிற்சி முகாம் நிறைவு!
புதன் 24, ஜூன் 2026 3:44:28 PM (IST)

கோவில்பட்டியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் : தற்காலிகக் கடைகள் அப்புறப்படுத்தப்பட்டன!
புதன் 24, ஜூன் 2026 3:15:25 PM (IST)

திமுக ஆட்சிக்கால 500 மின்சார பஸ் டெண்டர் ரத்து: தவெக அரசு அதிரடி நடவடிக்கை!
புதன் 24, ஜூன் 2026 12:50:47 PM (IST)

திமுக ஜென்-சி ஒருங்கிணைப்பாளரை நள்ளிரவில் கைது செய்ய முயற்சி: உதயநிதி, கனிமொழி கண்டனம்!
புதன் 24, ஜூன் 2026 12:08:59 PM (IST)


