» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கவின் கொலை வழக்கில் 2வது குற்றவாளிக்கு ஜாமீன் வழங்கியதற்கு கடும் எதிர்ப்பு - தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம்!

திங்கள் 15, ஜூன் 2026 12:22:57 PM (IST)



மென் பொறியாளர் கவின் கொலை வழக்கில் 2வது குற்றவாளிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக் கோரி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விசிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே ஆறுமுகமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ஐடி பொறியாளர் கவின், இவர் நெல்லையில் ஆணவக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்நிலையில் இந்த சம்பவத்தில் தொடர்புடைய காதலியின் அப்பா காவல் உதவி ஆய்வாளர் பணிபுரிந்த சரவணன், அம்மா கிருஷ்ணகுமாரி மற்றும் உறவினர் ஜெயபால் உள்ளிட்டோ மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு நெல்லை மாவட்ட வன்கொடுமை தடுப்புச் சட்ட நீதிமன்றம் விசாரணை செய்து வருகிறது. 

இந்நிலையில் இந்த கொலை வழக்கில் 2வது குற்றவாளியான சுர்ஜித்தின் தந்தை சரவணனுக்கு ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை கடந்த சில தினங்களுக்கு முன்பு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், அவருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக் கோரி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கவினின் தாய், உறவினர்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திரண்டு வந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

பின்னர், கவின் செல்வகணேஷ் சாதி ஆணவ படுகொலை வழக்கில் எஸ்ஐ சரவணனுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை வழங்கிய பிணையை உடனே ரத்து செய்ய, தமிழ்நாடு அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய கோரியும், தமிழ்நாடு அரசின் சார்பில் கவின் செல்வகணேஷ் சாதி ஆணவ படுகொலை வழக்கில் சிறப்பு வழக்கறிஞராக ப.பா.மோகனை உடனே நியமனம் செய்ய கோரியும், சாதி ஆணவ படுகொலைகளை தடுத்து நிறுத்த தமிழக அரசு உடனே ஆணவக் கொலைகளுக்கு எதிரான சிறப்புச் சட்டம் இயற்ற கோரியும், கவின் செல்வகணேஷ் சாதி ஆணவ படுகொலையில் ஈடுபட்ட A2 A3 A4 ஆகிய குற்றவாளிகள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறைப்படுத்தப் கோரியும் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். 

ஆர்ப்பாட்டத்தில் 50 பெண்கள் உட்பட200-க்கும் மேற்பட்ட விடுதலை சிறுத்தை கட்சியினர் கலந்து கொ்ணடனர். இன்ஸ்பெக்டர் தனசேகரன் தலைமையிலான 50க்கும்மேற்பட்ட போலீசார் பாதுகாப்பணியில் ஈடுபட்டனர். பின்னர் 4 பேர் மட்டும் ஆட்சியரிடம் நேரில் சென்று மனு அளித்தனர். இந்த போராட்டம் எதிரொலியாக ஆட்சியர் அலுவல வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory