» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தூத்துக்குடியில் பலத்த காற்றால் மீன் வரத்து குறைவு; பொதுமக்கள் ஆர்வம் – மீனவர்கள் மகிழ்ச்சி!
ஞாயிறு 7, ஜூன் 2026 9:08:16 AM (IST)
தூத்துக்குடியில் பலத்த காற்றால் மீன் வரத்து குறைந்த போதிலும் திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடி துறைமுகத்தில் மீன்கள் வாங்க பொதுமக்கள் குவிந்தனர்.
கடலில் மீன் வளத்தைப் பாதுகாக்கும் வகையில் விசைப்படகுகளுக்கான மீன்பிடி தடைக்காலம் தூத்துக்குடி மாவட்டத்தில் அமலில் உள்ளதால், கடந்த சில வாரங்களாக விசைப்படகு மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்லவில்லை. இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள சுமார் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. எனினும், நாட்டுப்படகு மற்றும் பைபர் படகு மீனவர்களுக்கு இந்தத் தடை இல்லாததால், அவர்கள் வழக்கம்போல் கடலுக்குச் சென்று மீன்பிடித்து வருகின்றனர்.
வழக்கமாகத் தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் நாட்டுப்படகு மீனவர்கள் சனிக்கிழமைகளில் அதிக அளவிலான மீன்களுடன் கரைக்குத் திரும்புவது வழக்கம். இதனால் சனிக்கிழமைகளில் துறைமுகத்தில் விற்பனைக்காக ஏராளமான மீன்கள் குவித்து வைக்கப்பட்டிருக்கும்.
ஆனால், இந்த வாரம் ஆழ்கடலுக்குச் சென்ற நாட்டுப்படகு மீனவர்களுக்குக் கடல் பகுதியில் வீசி வரும் பலத்த காற்றின் காரணமாகப் போதிய அளவு மீன்கள் கிடைக்கவில்லை. இதனால் அவர்கள் நேற்று குறைந்த அளவு மீன்களுடனேயே கரைக்குத் திரும்பி வந்தனர்.திரேஸ்புரம் துறைமுகத்தில் நேற்று மீன்களின் வரத்து குறைவாகக் காணப்பட்டதால், கடந்த வாரத்தைப் போன்றே விலையில் பெரிதளவில் மாற்றமின்றி மீன்கள் விற்பனையாகின.
நேற்றைய சந்தை விலை விபரம் (ஒரு கிலோ கணக்கில்): சீலா மீன்: ₹1700 வரை, விளை மீன் / ஊழி மீன்: ₹800 வரை, நண்டு: ₹800 முதல் ₹900 வரை, பாறை மீன்: ₹550 வரை, கேரை / சூறை மீன்: ₹400 வரை, சாளை மீன்: ஒரு கூடை ₹2000 வரை விற்பனையாகின
மீன்பிடி தடைக்காலம் காரணமாக விசைப்படகு மீன்கள் சந்தைக்கு வராததால், மாற்று வாய்ப்பான நாட்டுப்படகு மீன்களை வாங்குவதற்காகக் காலை முதலே ஏராளமான பொதுமக்கள் திரேஸ்புரம் துறைமுகத்தில் குவிந்தனர். அவர்கள் விலையைப் பொருட்படுத்தாமல் தங்களுக்குத் தேவையான மீன்களை மிகவும் ஆர்வத்துடன் போட்டி போட்டு வாங்கிச் சென்றனர். மீன்களின் விற்பனை விறுவிறுப்பாகவும் மும்முரமாகவும் நடந்த நிலையில், வரத்து குறைந்த காலத்திலும் மீன்களுக்கு நல்ல விலை கிடைத்ததால் நாட்டுப்படகு மீனவர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இரவு நேரங்களில் மின்தடை ஏற்படுவது ஏன்? - மின்வாரியத்துறை தலைவர் விளக்கம்
ஞாயிறு 7, ஜூன் 2026 11:49:49 AM (IST)

டாஸ்மாக் நிர்வாகத்தில் அதிரடி மாற்றம்: ஆண்டுக்கு ரூ.1,200 கோடி கூடுதல் வருவாய் - தமிழ்நாடு அரசு உத்தரவு!
ஞாயிறு 7, ஜூன் 2026 11:47:51 AM (IST)

குடும்பத்தினர் கண் எதிரே கடத்தப்பட்ட கார் விற்பனை ஏஜென்ட் மீட்பு: 2 பேர் கைது!
ஞாயிறு 7, ஜூன் 2026 8:58:15 AM (IST)

நெல்லையில் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் போக்சோவில் கைது!
ஞாயிறு 7, ஜூன் 2026 8:51:11 AM (IST)

ரயிலில் வந்த இளம்பெண்ணுக்குப் பாலியல் தொல்லை : கொத்தனாருக்கு தர்ம அடி கொடுத்துப் போலீசில் ஒப்படைப்பு!
ஞாயிறு 7, ஜூன் 2026 8:37:41 AM (IST)

ஜெர்மன் நிறுவனத்துடன் பசுமை எரிசக்தி வர்த்தகம் : தூத்துக்குடி வ.உ.சி துறைமுகம் புதிய சாதனை
சனி 6, ஜூன் 2026 5:40:06 PM (IST)


