» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஜெர்மன் நிறுவனத்துடன் பசுமை எரிசக்தி வர்த்தகம் : தூத்துக்குடி வ.உ.சி துறைமுகம் புதிய சாதனை

சனி 6, ஜூன் 2026 5:40:06 PM (IST)



தூய்மையான எரிபொருட்களின் உற்பத்தி, வர்த்தகம் மற்றும் ஏற்றுமதியை ஊக்குவிப்பதற்காக ஜெர்மனியின் H2Global நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்ட முதல் இந்தியத் துறைமுகம் என்ற பெருமையைத் தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையம் பெற்றுள்ளது.

துறைமுகத்தில் தூய்மையான கப்பல் எரிபொருட்களுக்கான 'இரட்டை ஏல முறை' அல்லது அதற்கு இணையான ஏல முறைகளை உருவாக்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதே இதன் முதன்மை நோக்கமாகும். பசுமை அமோனியா, பசுமை மெத்தனால் உள்ளிட்ட ஹைட்ரஜன் சார்ந்த எரிபொருட்களைச் சேமித்தல், கையாளுதல், கப்பல்களுக்கு எரிபொருள் நிரப்புதல் மற்றும் பாதுகாப்பான போக்குவரத்துக்கான கட்டமைப்புகள் இந்த ஒத்துழைப்பின் கீழ் ஆய்வு செய்யப்படவுள்ளன.

இக்கூட்டாண்மை இந்தியாவில் இருந்து ஜெர்மனி மற்றும் இதர ஐரோப்பிய நாடுகளுக்குப் பசுமை எரிபொருட்களை ஏற்றுமதி செய்ய வழிவகுக்கும். இது, வரும் 2070-க்குள் இந்தியாவை 'நிகர பூஜ்ஜிய கார்பன் உமிழ்வு' (Net Zero) நிலைக்குக் கொண்டு செல்லும் பிரதமரின் தொலைநோக்கு இலக்கிற்குப் பக்கபலமாய் அமையும்.

இந்தச் சர்வதேசக் கூட்டாண்மை புதைபடிவ எரிபொருட்களின் இறக்குமதிச் சார்பைக் குறைத்து, நாட்டின் ஆற்றல் பாதுகாப்பை வலுப்படுத்துவதுடன், வ.உ.சி துறைமுகத்தைப் பசுமை எரிசக்தி ஏற்றுமதிக்கான உலகளாவிய முக்கிய மையமாக மாற்றும் எனத் துறைமுக ஆணையத் தலைவர் சுஷாந்த் குமார் புரோஹித் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory