» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தூத்துக்குடியில் தடைக்காலத்தால் எகிறும் மீன் விலை : பொதுமக்கள், வியாபாரிகள் குவிந்தனர்!!
ஞாயிறு 10, மே 2026 9:55:39 AM (IST)
தூத்துக்குடி திரேஸ்புரம் மீன்பிடி துறைமுகத்தில் மீன்கள் வரத்து அதிகரித்துக் காணப்பட்டது. இருப்பினும், மீன்பிடி தடைக்காலம் மற்றும் தேவை அதிகரிப்பு காரணமாக மீன்களின் விலை குறையாமல் உயர்ந்தே காணப்பட்டதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் தற்போது விசைப்படகுகளுக்கான மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளதால், நாட்டுப்படகு மீனவர்கள் மட்டுமே கடலுக்குச் சென்று வருகின்றனர். கடந்த சில வாரங்களாகக் கோடை வெயிலின் தாக்கம் காரணமாக மீன்பாடு குறைவாக இருந்த நிலையில், நேற்று கரை திரும்பிய மீனவர்களின் வலைகளில் பெரிய அளவிலான மீன்கள் அதிகளவில் கிடைத்தன.
மீன்கள் வரத்து அதிகமாக இருந்தபோதிலும், சந்தையில் நிலவும் தட்டுப்பாடு காரணமாகக் கடந்த வாரத்தைப் போன்றே விலையில் மாற்றம் இன்றி உயர்ந்து காணப்பட்டது சீலா மீன் ரூ. 1,300 முதல் ரூ. 1,500 வரை. விளை மீன், ஊழி, பாறை ரூ. 500 முதல் ரூ. 700 வரை. கேரை மீன் (70-80 கிலோ எடை கொண்டவை) ரூ. 270 முதல் ரூ. 300 வரை. நண்டு ரூ. 700 வரை. சாளை மீன் ஒரு கூடை ரூ. 2,500 வரை விற்பனையானது.
கோடை விடுமுறை என்பதால் மீன்களை வாங்குவதற்காகத் திரேஸ்புரம் துறைமுகத்தில் அதிகாலையிலேயே பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் அதிகளவில் திரண்டனர். வரத்து அதிகமாக இருந்தும், போட்டி போட்டுக்கொண்டு மக்கள் மீன்களை வாங்கிச் சென்றதால் மீனவர்களுக்கு நல்ல லாபம் கிடைத்தது. நீண்ட நாட்களுக்குப் பிறகு நல்ல மீன்பாடும், அதே வேளையில் கூடுதல் லாபமும் கிடைத்துள்ளதால் தூத்துக்குடி நாட்டுப்படகு மீனவர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தெற்கு ரயில்வேயின் புதிய தலைமை மக்கள் தொடர்பு அதிகாரியாக எஸ்.என். நரேன் நியமனம்!
புதன் 13, மே 2026 8:10:40 PM (IST)

கள்ளத்தொடர்பு விவகாரத்தில் இளம்பெண் கொலை: தம்பதி கைது - தூத்துக்குடியில் பயங்கரம்!
புதன் 13, மே 2026 5:21:10 PM (IST)

எடப்பாடி பழனிசாமி பதவி ஆசை: திமுகவுடன் கூட்டணி முயற்சி - சி.வி. சண்முகம் பரபரப்பு புகார்!
புதன் 13, மே 2026 4:57:47 PM (IST)

அமைச்சரவையில் நாடார் சமூக எம்.எல்.ஏ-க்களுக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும்: சமக தீர்மானம்!
புதன் 13, மே 2026 4:53:34 PM (IST)

குதிரை பேரப் புகார்: தவெக தரம் தாழ்ந்த அரசியலில் ஈடுபடுவதாக மு.க. ஸ்டாலின் விமர்சனம்!
புதன் 13, மே 2026 4:21:55 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் இந்த ஆண்டு 50 பேர் குண்டர் சட்டத்தில் கைது!
புதன் 13, மே 2026 4:16:28 PM (IST)


